நீட் எதிர்ப்பு போராட்டம்: பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர் தலைமையில் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம்
Tamilnadu

நீட் எதிர்ப்பு போராட்டம்: பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர் தலைமையில் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம்

Jul 23, 2026

நீட் (NEET) தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன் மற்றும் அமீர் தலைமையில் இன்று (ஜூலை 23) சென்னையில் போராட்டம் நடைபெற உள்ளது.

சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் இன்று மாலை 3 மணிக்கு இந்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக பொறுப்புக்கூற வேண்டும், மாணவர்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்க வேண்டும், கல்வியில் சமத்துவம் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இந்த போராட்டத்தில் திரைப்படத் துறையைச் சேர்ந்த பல்வேறு கலைஞர்கள், மாணவர் அமைப்புகள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லியில் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சென்னை நகரில் நடைபெறவுள்ள இந்த போராட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *