நீட் எதிர்ப்பு போராட்டம்: பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர் தலைமையில் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம்
நீட் (NEET) தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன் மற்றும் அமீர் தலைமையில் இன்று (ஜூலை 23) சென்னையில் போராட்டம் நடைபெற உள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் இன்று மாலை 3 மணிக்கு இந்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடன், சர்ச்சை, தணிக்கை: வெற்றிமாறனின் தயாரிப்பாளர் பயணம் ஏன் முடிவுக்கு வந்தது?
தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றிமாறன், தனது தயாரிப்பு நிறுவனமான கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனியை மூடுவதாக அறிவித்துள்ளார். ‘பேட் கேர்ள்’ திரைப்படம்தான் தனது தயாரிப்பில் வெளிவரும் கடைசிப் படம் என்றும் அவர் கூறியுள்ளார். ஒரு சிறந்த படைப்பாளியாக அறியப்படும் வெற்றிமாறன், ஏன் இத்தகைய முடிவை எடுத்தார் என்பது குறித்து திரையுலகில் பெரும் விவாதம் எழுந்துள்ளது. இதுகுறித்து, பிரபல தயாரிப்பாளர்
