தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சவால்: 15 நாட்களில் 25 கொலைகள்! முதல்வர் விஜய்யின் அதிரடி நடவடிக்கை என்ன?
சென்னை: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் சி. ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்று 15 நாட்களைக் கடந்துள்ள நிலையில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு விவகாரம் தற்பொழுது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. “ஆட்சி மாறினால் காட்சி மாறும், மக்கள் பயமின்றி வாழலாம்” என்று தேர்தல் பிரச்சாரங்களின் போது தவெக தரப்பில் மிகத் தீவிரமாகப்
காஞ்சிபுரம்: டெண்டர் விதிமுறைகளை மீறியதாக 2 பெண் அதிகாரிகள் சஸ்பெண்ட்!
சென்னை: காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் ஆன்லைன் டெண்டர் வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே அது மூடப்பட்டு, பணி ஆணை வழங்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த டெண்டர் விதிமுறை மீறல் புகாரைத் தொடர்ந்து, இரண்டு பெண் அதிகாரிகள் தற்காலிக பணி நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளனர். ஒரே நாளில் டெண்டர், ஒரே நாளில் பணி ஆணை! காஞ்சிபுரம்
“அப்பா… உங்கள் கனவை நனவாக்குவேன்!” ராஜீவ் காந்தியின் 35-வது நினைவு நாளில் ராகுல் காந்தி உருக்கம்!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35-வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான ‘வீர் பூமிக்கு’ காங்கிரஸ் தலைவர்கள் சென்றனர். அங்கு மலர் தூவி அவர்கள் தங்களது மரியாதையைச் செலுத்தினர். வீர் பூமியில் சோனியா, ராகுல் அஞ்சலி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி
தமிழக அமைச்சரவையில் யாருக்கு எந்த துறை? செங்கோட்டையன் இலாகா அதிரடி மாற்றம்! 23 அமைச்சர்களின் முழு விவரம்!
தமிழக அமைச்சர்களாக காங்கிரஸ் கட்சியின் 2 எம்.எல்.ஏ-க்கள் உட்பட 23 பேர் இன்று பதவியேற்றனர். அவர்களுக்குத் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தற்போது இந்த 23 புதிய அமைச்சர்களுக்கும் துறைகள் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. செங்கோட்டையன் இலாகா மாற்றம்: நிதித்துறை யாருக்கு? கடந்த முறை கே.ஏ.செங்கோட்டையனுக்கு நிதித் துறை வழங்கப்பட்டு இருந்தது. தற்போது
மீண்டும் முதலிடத்தில் வந்தே மாதரம்! தமிழ்த்தாய் வாழ்த்து 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டதால் புதிய சர்ச்சை!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சரவை விரிவாக்க விழா இன்று காலை லோக் பவனில் நடைபெற்றது. இதில் 23 புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். ஆனால், இந்த விழாவில் பாடப்பட்ட பாடல்களின் வரிசை தற்போது புதிய அரசியல் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தொடரும் வந்தே மாதரம் சர்ச்சை முன்னதாக, தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற விழா நடைபெற்றது. அந்த நிகழ்விலும்
தமிழக அமைச்சரவை அதிரடி விரிவாக்கம்: 23 புதிய தவெக எம்.எல்.ஏ-க்கள் இன்று அமைச்சர்களாகப் பதவியேற்பு!
தமிழக அரசியல் களத்தில் இன்று மிக முக்கியமான திருப்பம் ஏற்பட்டுள்ளது. தவெக தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று அதிகாரப்பூர்வமாக விரிவாக்கம் செய்யப்படுகிறது. புதிய அமைச்சரவையில் 23 எம்.எல்.ஏ-க்களை அமைச்சர்களாக நியமிக்க முதலமைச்சர் விஜய் பரிந்துரை செய்தார். இந்தப் பரிந்துரைக்குத் தமிழக ஆளுநர் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். ராஜ் பவனில் இன்று காலை நடக்கும் பதவியேற்பு விழா இதற்கான அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு
அழுகிப் போன கை – யார் பொறுப்பு? நெல்லை அரசு மருத்துவமனையில் துயரம்! ‘அண்ணன் ஆட்சி’ என முட்டுகொடுத்த பெண் யார்?
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நிகழ்ந்த ஒரு கோர விபத்தும், அதைத் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் அரங்கேறிய துயரமும் இன்று தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கிரஷர் விபத்தில் துண்டிக்கப்பட்ட தொழிலாளியின் கையை, உரிய மருத்துவப் பாதுகாப்பின்றி சாக்குப்பையில் அள்ளி வந்த அவலம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 3 மணி நேரம் அலட்சியம்: அழுகிய நிலையில் கொண்டு வரப்பட்ட
காலையில் டெண்டர்; மாலையில் பணி ஆணை! புஸ்சி ஆனந்த் துறையில் அதிரடி காட்டிய 6 மணி நேர டெண்டர் சர்ச்சை!
தமிழகத்தில் புதிய ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அரசின் ஊரக உள்ளாட்சித் துறையில், உலகிலேயே முதல்முறையாக காலையில் டெண்டர் கோரப்பட்டு, மாலையிலேயே பணி ஆணை (Work Order) வழங்கப்பட்ட வினோத சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. 6 மணி நேரத்தில் முடிந்த இ-டெண்டர் நடைமுறை! காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் பஞ்சாயத்து யூனியன் வட்டார வளர்ச்சி
தமிழ்நாட்டில் PM SHRI திட்டம்: சாத்தியங்களை ஆராய்ந்து முதலமைச்சர் விஜய் முக்கிய முடிவு!
தமிழகத்தில் மத்திய அரசின் கல்வித் திட்டமான ‘பிஎம் ஸ்ரீ’ (PM SHRI Scheme) திட்டத்தை செயல்படுத்துவது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்திட்டத்தின் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து உரிய முடிவு எடுக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். முதலமைச்சருடன் ABVP நிர்வாகிகள் சந்திப்பு ஆர்.எஸ்.எஸ் (RSS) இயக்கத்தின் மாணவர் அமைப்பான ஏபிவிபி (ABVP) அமைப்பின் முக்கிய நிர்வாகிகள், சென்னை தலைமைச்
“ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை; இது பொய்க்கால் குதிரை அரசு!” — தவெக அரசைச் சாடிய எடப்பாடி பழனிசாமி!
சென்னை | மே 18, 2026 காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியில் இரண்டு இளைஞர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இக்கொலைச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசைப் “பொய்க்கால் குதிரை அரசு” என அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மிகக்
