ஆளுநர் விவகாரத்தில் தவெக அரசு சமரசம் செய்துவிட்டது – ஆளூர் ஷாநவாஸ் விமர்சனம்
ஆளுநர் தொடர்பான விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை தற்போதைய தமிழக அரசு முழுமையாக பாதுகாக்கவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்தில், “ஆளுநர் விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை முந்தைய திமுக அரசு நிலைநாட்டியது. ஆனால், தற்போதைய தவெக அரசு சமரசம் செய்துவிட்டது” என்று குற்றம்சாட்டியுள்ளார். தமிழக அரசுக்கும்
உத்தரப்பிரதேச தேர்தல்: சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணிக்கு தயாராக உள்ளோம் – அசாதுதீன் ஒவைசி
உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைக்கத் தயாராக இருப்பதாக அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தெஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “உத்தரப்பிரதேச பேரவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் நோக்கில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த இதுவே சரியான தருணம்” என்றார்.
“தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்” – மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக நடிகை ஜோதிகா பதிவு
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக டெல்லியில் நடைபெற்று வரும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நடிகை ஜோதிகா சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “தர்மேந்திர பிரதான், பதவி விலகுங்கள்; ராஜினாமா செய்யுங்கள்” என்று வலியுறுத்தியுள்ள அவர், மாணவர்களுடனும் நாட்டின் எதிர்காலத்துடனும் நிற்பதாக தெரிவித்துள்ளார். மேலும், “நான் மாணவர்களுடனும், நமது தேசத்தின் எதிர்காலத்துடனும்
மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக காந்தி ஸ்மிருதியில் அஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி; கல்வி அமைச்சர் பதவி விலக மீண்டும் வலியுறுத்தல்
டெல்லியில் நடைபெற்று வரும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பல்வேறு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வியாழக்கிழமை காந்தி ஸ்மிருதிக்கு சென்று மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினர். முதலில் இந்தியா கேட் வரை பேரணியாகச் சென்று அங்கிருந்து காந்தி ஸ்மிருதிக்கு நடைபயணமாக செல்ல எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. ஆனால், டெல்லி காவல்துறை
மத்திய அரசுடன் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று; நாடு தழுவிய போராட்டத்திற்கு CJP அழைப்பு
நீட் தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) பிரதிநிதிகளுக்கும் இடையிலான 2-ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது. போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், பேச்சுவார்த்தையுடன் இணைந்தே நாடு தழுவிய போராட்டம் நடத்துமாறு CJP அழைப்பு விடுத்துள்ளது. நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பொறுப்புக்கூற வேண்டியவர்கள்
“நிபந்தனைகள் விதித்து விவாதத்தை திசைதிருப்ப வேண்டாம்” – எதிர்க்கட்சிகளுக்கு கிரண் ரிஜிஜு வேண்டுகோள்
வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த தயாராக இருப்பதாகவும், அதற்கு தேவையற்ற நிபந்தனைகள் விதித்து விவாதத்தை திசைதிருப்ப வேண்டாம் என்றும் மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “மற்ற நாடாளுமன்ற நடவடிக்கைகளைவிட வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு முன்னுரிமை அளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. இந்த
நீட் விவகாரம்: தர்மேந்திர பிரதான் ராஜினாமா கோரி புதுக்கோட்டையில் மாணவர்கள் போராட்டம்
நீட் (NEET) தேர்வு முறைகேடு விவகாரத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, புதுக்கோட்டையில் இந்திய ஜனநாயக மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள், “ஜனநாயகனா..? ஜனநாயகமா..? தமிழக மக்களின் தீர்ப்பு யார் பக்கம்?” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை
“மாணவர்கள் மீது தடியடி நடத்தும் நாடு தோல்வியடைந்துவிடுகிறது” – கமல்ஹாசன் உருக்கமான பதிவு
நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் அதற்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்று வரும் மாணவர் போராட்டங்கள் தொடர்பாக, ராஜ்யசபா உறுப்பினரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் உருக்கமான கருத்தை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு குழந்தை அழுதபோதே நாம் செவிசாய்ந்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக, நம் குழந்தைகளில் எண்ணற்றோர் இறக்கும் வரை நாம் காத்திருந்தோம்”
CJP போராட்டம்: ஊடகங்களின் செய்தி வெளியீடு குழப்பத்தை ஏற்படுத்தியது – விமர்சனம்
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) சார்பில் கடந்த ஜூலை 20 நடைபெற்ற பேரணி மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல்கள் குறித்து ஊடகங்கள் வெளியிட்ட செய்தி முறைகள் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன. இதுகுறித்து வெளியான கருத்தில், போராட்டம் நடைபெற்ற நேரத்தில் தொலைக்காட்சி ஊடகங்கள் நேரலையாக காட்சிகளை ஒளிபரப்பியது பார்வையாளர்களுக்கு சம்பவங்களை நேரடியாக அறியும் வாய்ப்பை வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், ஜூலை
தர்மேந்திர பிரதான் ராஜினாமா கோரி எதிர்க்கட்சி போராட்டம்; நாடாளுமன்றத்தில் ஆளும்-எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போட்டி ஆர்ப்பாட்டம்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சி கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட இந்தியா (INDIA) கூட்டணி கட்சிகளின் மூத்த தலைவர்கள் மற்றும் எம்.பி.க்கள் பங்கேற்று, நீட் தேர்வு முறைகேடுகள்
