சட்டப்படிப்புக்கு நுழைவுத் தேர்வு? – வரைவு மசோதா குறித்து பொதுமக்கள் கருத்துகளை கோரிய இந்திய பார் கவுன்சில்
சட்டப்படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு வழிவகை செய்யும் அம்சங்களை உள்ளடக்கிய ‘வக்கீல்கள் (திருத்த) வரைவு மசோதா, 2026’-ஐ இந்திய பார் கவுன்சில் (Bar Council of India) வெளியிட்டுள்ளது.
இந்த வரைவு மசோதா தொடர்பாக பொதுமக்கள், சட்ட நிபுணர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் தங்களது கருத்துகள், பரிந்துரைகளை தெரிவிக்க இந்திய பார் கவுன்சில் அழைப்பு விடுத்துள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் தங்களது கருத்துகளை draftadvact2026bill@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஜூலை 31-க்குள் அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை ஆய்வு செய்த பின்னர், அதனடிப்படையில் மத்திய சட்ட அமைச்சகத்திற்கு இந்திய பார் கவுன்சில் தனது பரிந்துரைகளை வழங்க உள்ளது.
சட்டக் கல்வி மற்றும் வழக்கறிஞர் தொழிலில் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த வரைவு மசோதா வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம், சட்டப்படிப்புக்கான நுழைவுத் தேர்வு அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து இறுதி முடிவு, பொதுமக்களின் கருத்துகள் மற்றும் மத்திய அரசின் பரிசீலனைக்கு பிறகே எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
