மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த அமைச்சர் விஸ்வநாதன்; தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் சர்ச்சை
திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை, உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் புறக்கணித்துள்ளார். இந்த முடிவு அரசியல் மற்றும் கல்வி வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. அமைச்சர் விஸ்வநாதன், “தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்தில் பாடப்படுவதை ஏற்க முடியாது” என்ற காரணத்தைக் கூறி விழாவில் பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, பட்டமளிப்பு விழாவில் முனைவர் பட்டம் பெறவிருந்த டிஜிபி
நீட் விவகாரம்: தர்மேந்திர பிரதான் ராஜினாமா கோரி புதுக்கோட்டையில் மாணவர்கள் போராட்டம்
நீட் (NEET) தேர்வு முறைகேடு விவகாரத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, புதுக்கோட்டையில் இந்திய ஜனநாயக மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள், “ஜனநாயகனா..? ஜனநாயகமா..? தமிழக மக்களின் தீர்ப்பு யார் பக்கம்?” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை
சோனம் வாங்சுக் உண்ணாவிரதம்: காந்தியின் கொள்கையை நினைவூட்டும் போராட்டமா?
சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து, அநீதியை செய்தவர்களின் மனசாட்சியை மாற்றிய மகாத்மா காந்தி, 1932 அக்டோபர் 30 அன்று உண்ணாவிரதம் குறித்து முக்கியமான கருத்தை பதிவு செய்திருந்தார். “காலவரையற்ற உண்ணாவிரதத்திற்கு நான் விதிமுறைகளை வகுக்க முடியாது. ஆனால், ஒரு உண்ணாவிரதம் முழுமையான உண்மை மற்றும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அது ஒருவரின் மனசாட்சியின் உந்துதலால் மட்டுமே இருக்க வேண்டும்;
