தமிழ்நாடு என்ற பெயர் சூட்டிய வரலாற்று நாள்: ஜூலை 18-ஐ நினைவுகூரும் நாள்
தமிழக வரலாற்றில் மறக்க முடியாத முக்கிய நாளாக 1967-ஆம் ஆண்டு ஜூலை 18 திகழ்கிறது. அன்றைய தினம், முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா தலைமையிலான திமுக அரசு, அப்போதைய ‘மதராஸ் மாகாணம்’ என்ற பெயரை ‘தமிழ்நாடு’ என மாற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றியது.
தமிழர்களின் மொழி, பண்பாடு மற்றும் அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானம், மாநிலத்தின் வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
‘தமிழ்நாடு’ என்ற பெயர், தமிழர் அடையாளத்தையும், மாநிலத்தின் தனித்துவத்தையும் உலகிற்கு எடுத்துக்காட்டும் வரலாற்று அங்கீகாரமாக அமைந்தது. ஜூலை 18, தமிழ்நாட்டின் பெயர் மாற்றத்திற்கான சட்டமன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்ட வரலாற்று நாளாக ஆண்டுதோறும் நினைவுகூரப்படுகிறது.
