“தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்” – மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக நடிகை ஜோதிகா பதிவு
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக டெல்லியில் நடைபெற்று வரும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நடிகை ஜோதிகா சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “தர்மேந்திர பிரதான், பதவி விலகுங்கள்; ராஜினாமா செய்யுங்கள்” என்று வலியுறுத்தியுள்ள அவர், மாணவர்களுடனும் நாட்டின் எதிர்காலத்துடனும் நிற்பதாக தெரிவித்துள்ளார். மேலும், “நான் மாணவர்களுடனும், நமது தேசத்தின் எதிர்காலத்துடனும்
டெல்லி மாணவர் போராட்டம்: போலீசார் பெல்லட் துப்பாக்கி பயன்படுத்தினரா? சிகிச்சையில் உள்ள போராட்டக்காரருக்கு பெல்லட் காயம் என தகவல்
டெல்லியில் ஜூலை 20 அன்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தின் போது போலீசார் நடத்திய நடவடிக்கையில் காயமடைந்த போராட்டக்காரர்களில் ஒருவருக்கு பெல்லட் (Pellet) துப்பாக்கியால் ஏற்பட்ட காயம் இருப்பதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் வெளியாகியுள்ளன. லேடி ஹார்டிஞ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த போராட்டக்காரருக்கு பெல்லட் காயம்
சி.ஜே.பி. போராட்டத்தில் குழப்பம் ஏற்படுத்த பாஜக முயற்சி? – அபிஜித் திப்கே குற்றச்சாட்டு
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) போராட்டத்தில் வெளிநபர்களை அனுப்பி திட்டமிட்டு குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாக அக்கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே குற்றம்சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த ஒரு மாதமாக நாங்கள் அமைதியான முறையில் இங்கு போராட்டம் நடத்தி வருகிறோம். இந்த ஒரு மாத காலத்தில் இதுபோன்ற எந்தச் சம்பவமும் நடைபெறவில்லை.
CJP போராட்டம்: ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு திமுக கண்டனம்
தேர்வு முறைகேடுகள் மற்றும் நீட் (NEET) தேர்வு விவகாரத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) மற்றும் மாணவர்கள் டெல்லியில் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
