சி.ஜே.பி. போராட்டத்தில் குழப்பம் ஏற்படுத்த பாஜக முயற்சி? – அபிஜித் திப்கே குற்றச்சாட்டு
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) போராட்டத்தில் வெளிநபர்களை அனுப்பி திட்டமிட்டு குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாக அக்கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே குற்றம்சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த ஒரு மாதமாக நாங்கள் அமைதியான முறையில் இங்கு போராட்டம் நடத்தி வருகிறோம். இந்த ஒரு மாத காலத்தில் இதுபோன்ற எந்தச் சம்பவமும் நடைபெறவில்லை.
CJP போராட்டம்: ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு திமுக கண்டனம்
தேர்வு முறைகேடுகள் மற்றும் நீட் (NEET) தேர்வு விவகாரத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) மற்றும் மாணவர்கள் டெல்லியில் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கல்வி அமைச்சராக சோனம் வாங்சுக்? – கெஜ்ரிவால் வலியுறுத்தல்
டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவியில் இருந்து நீக்கி, அவரது இடத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலரும் கல்வி சீர்திருத்த ஆதரவாளருமான சோனம் வாங்சுக்கை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்ட கெஜ்ரிவால், நாட்டின் கல்வி அமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை திறம்பட கையாளக்கூடியவர் சோனம் வாங்சுக் என்றும், கல்வித்
சோனம் வாங்சுக் உண்ணாவிரதம்: காந்தியின் கொள்கையை நினைவூட்டும் போராட்டமா?
சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து, அநீதியை செய்தவர்களின் மனசாட்சியை மாற்றிய மகாத்மா காந்தி, 1932 அக்டோபர் 30 அன்று உண்ணாவிரதம் குறித்து முக்கியமான கருத்தை பதிவு செய்திருந்தார். “காலவரையற்ற உண்ணாவிரதத்திற்கு நான் விதிமுறைகளை வகுக்க முடியாது. ஆனால், ஒரு உண்ணாவிரதம் முழுமையான உண்மை மற்றும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அது ஒருவரின் மனசாட்சியின் உந்துதலால் மட்டுமே இருக்க வேண்டும்;
