அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் உடனே புகார் செய்யுங்கள்: வாட்ஸ்அப் சேவையை அறிமுகப்படுத்திய தமிழக அரசு
அரசு அலுவலகங்களில் லஞ்சம் கோருவது அல்லது லஞ்சம் பெறுவது தொடர்பான புகார்களை பொதுமக்கள் எளிதாக தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு புதிய பிரத்யேக வாட்ஸ்அப் சேவை எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, அரசு அலுவலகங்களில் பணிக்காக லஞ்சம் கோரப்பட்டாலோ அல்லது லஞ்சம் பெறப்பட்டாலோ, பொதுமக்கள் 94981 80936 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு நேரடியாக புகார் அளிக்கலாம். புகார்களுடன் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், புகைப்படங்கள்,
மகாராஷ்டிராவில் 2.3 கோடி லிட்டர் கலப்பட பால் விநியோகம்? டிடெர்ஜென்ட், பாமாயில் கலந்து தயாரித்ததாக அதிர்ச்சி தகவல்
மகாராஷ்டிராவில் டிடெர்ஜென்ட் மற்றும் பாமாயில் கலந்து தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் 2.3 கோடி லிட்டர் கலப்பட பால் மாநிலம் முழுவதும் விநியோகிக்கப்பட்டதாக போலீஸ் விசாரணையில் வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையின்படி, செயற்கையாக தயாரிக்கப்பட்ட இந்த கலப்பட பாலில் டிடெர்ஜென்ட், பாமாயில் உள்ளிட்ட ஆபத்தான பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த பால் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில்
மகப்பேறு வார்டில் முதல்வர் ஆய்வு: “விளம்பரம் தேடுவது நல்லதல்ல” – பாலபாரதி விமர்சனம்
சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையின் மகப்பேறு வார்டில் முதலமைச்சர் விஜய் நேரில் ஆய்வு மேற்கொண்டது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி விமர்சனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்தில், மகப்பேறு வார்டுகள் பெண்களின் தனியுரிமை மற்றும் மருத்துவ பாதுகாப்பு மிக முக்கியமான இடங்கள் என்பதால், அங்கு அரசியல் விளம்பரத்துக்கான சூழல் உருவாக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மரிய வில்சன் மீதான வழக்கு விசாரணை ஆகஸ்ட் 18-க்கு ஒத்திவைப்பு
தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் மீதான தாக்குதல் வழக்கின் விசாரணையை புதுச்சேரி நீதிமன்றம் ஆகஸ்ட் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு தனது சகோதரர் மரிய குலோத் மற்றும் அவரது மனைவி கெரோலின் ஆகியோரை தாக்கியதாக அமைச்சர் மரிய வில்சன் மீது லாஸ்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையில்
சென்னையில் 162 மகளிர் பேருந்து சேவைகள் குறைப்பு? பயணிகள் அதிருப்தி
சென்னையில் மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவைகள் குறைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பெண்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கடந்த மாதம் இயக்கப்பட்ட மகளிர் விடியல் பயணப் பேருந்துகள் உட்பட மொத்தம் 162 பேருந்து சேவைகள் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், 100-க்கும் மேற்பட்ட மகளிர் விடியல் பயணப் பேருந்துகள் இயக்கத்தில் இருந்து குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், வேலைக்குச் செல்லும் பெண்கள்,
கன்னிகைப்பேர் அமோனியா வாயுக் கசிவு: 18 உயிரிழப்புக்கு காரணமான தனியார் நிறுவனத்துக்கு அதிகாரிகள் ‘சீல்’
திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டு 18 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தில், தொடர்புடைய தனியார் கடல் உணவு பதப்படுத்தும் நிறுவனத்துக்கு வருவாய்த் துறையினர் அதிகாரப்பூர்வமாக ‘சீல்’ வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே செயல்பட்டு வந்த இந்த நிறுவனம் இறால் உள்ளிட்ட கடல் உணவுப் பொருட்களை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது. கடந்த ஜூன் 21-ஆம்
அகமதாபாத் விமான விபத்து: ஒரு ஜன்னல் இருக்கையில் இருந்து மீண்ட அதிசய மனிதர்
அகமதாபாத்: ஏர் இந்தியா விமான விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த மாபெரும் பேரழிவில், 38 வயதான ரமேஷ் விஸ்வாஸ்குமார் புச்சர்வாடா மட்டும் உயிருடன் மீண்டதற்காக “அதிசய மனிதர்” என அழைக்கப்படுகிறார். அவர் இருந்த 11A இருக்கை, விமானத்தின் அவசர வெளியேற்றத் துவாரத்திற்கு அருகில் இருந்தது. AI171 என்ற விமானம் அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட
மணிப்பூர் கலவரம்: 2 ஆண்டுகள் மறுத்த முதல்வர், இப்போது ராஜினாமா செய்வது ஏன்..? பின்னணி என்ன?
திடீரென பிரன் சிங் தனது முதல்வர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இரண்டு ஆண்டுகள் பதவியை ராஜினாமா செய்ய மறுத்த பிரன் சிங் இப்போது ஏன் ராஜினாமா செய்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மணிப்பூரில் இரு சமுதாயத்திற்கிடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்த தொடர் வன்முறையில் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தால் பெண்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து பா.ஜ.கவை
