தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியான தவெக-விற்கு முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் அடுத்தடுத்து மாறி வரும் வேளையில், மக்கள் நலன் சார்ந்த புதிய விமர்சனம் ஒன்று எழுந்துள்ளது.
கிலோவுக்கு ₹10 வரை உயர்ந்த அரிசி விலை; தவெக அரசு ஆலோசிக்காதது ஏன் எனப் பகிரங்கக் கேள்வி!
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் (KMDK) பொதுச்செயலாளர் ஈஸ்வரன், தவெக அரசின் தற்போதைய செயல்பாடுகள் குறித்துக் கடுமையான கேள்விகளை முன்வைத்துள்ளார்.
மாநிலத்தில் ஏழை எளிய மக்களின் அன்றாடப் பாதிப்புகள் குறித்து அவர் வெளியிட்டுள்ள முக்கிய விபரங்கள் இதோ:
“தற்போது தமிழ்நாட்டில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.10 வரை மிகக் கடுமையாக அதிகரித்துள்ளது.
இந்த விலை உயர்வை உடனே கட்டுப்படுத்த முதலமைச்சர் விஜய், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை வைத்து இதுவரை ஏன் ஒரு அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட நடத்தவில்லை?”
“மாற்றுக் கட்சியினரைச் சேர்ப்பதில் காட்டும் அக்கறை மக்கள் மீது இல்லை!” – கொமதேக ஈஸ்வரன் அதிரடி அட்டாக்!
அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மாமல்லபுரத்தில் தவெக-வில் இணைந்த பரபரப்பான சூழலில், இந்த விமர்சனம் எழுந்துள்ளது.
தமிழகத்திற்கு இப்போதைக்கு இடைத்தேர்தல் இல்லை எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வேளையில், ஈஸ்வரன் இந்த மக்கள் பிரசினையைக் கையில் எடுத்துள்ளார்.
“மாற்றுக் கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளைத் தங்கள் கட்சியில் வளைத்துச் சேர்ப்பதற்குத் தவெக தலைமை தற்போது அசாத்திய அக்கறையைக் காட்டி வருகிறது” என அவர் சாடியுள்ளார்.
அரசியல் லாபங்களுக்காகக் காட்டும் அதே தீவிர அக்கறையை, விலைவாசி உயர்வால் தவிக்கும் சாமானிய மக்களின் மீதும் தவெக அரசு காட்ட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
