“இது வாய்ப்பூட்டு அறிக்கை!” – மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்கத் தடைக்கு நெல்சன் சேவியர் கண்டனம்!
இடதுசாரிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்கத் தடை விதிக்க கல்லூரிக் கல்வி இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
கல்லூரிக் கல்வி இயக்கக சுற்றறிக்கை விவரம்!
கல்லூரிக் கல்வி ஆணையர் அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள ந.க.எண்.TNDCE/5658/2025-01 சுற்றறிக்கையின் முக்கிய விவரங்கள்:
“இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளித் கல்வி, உயர் கல்வி, காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து கூட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கையின் விவரங்களை உடனே இவ்வலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.”
“மிஸ்டர் விஜய் எவ்வளவு தூரம்தான் போவீர்கள்?” – நெல்சன் சேவியர் கேள்வி!
இந்த சுற்றறிக்கையைக் சுட்டிக்காட்டி பத்திரிகையாளர் நெல்சன் சேவியர் எழுப்பியுள்ள விமர்சனங்கள்:
- வரலாற்றுச் சான்று: இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம்தான் தமிழ்நாட்டு இளைஞர்களை இந்தியாவுக்கு அடையாளம் காட்டியது.
- வாய்ப்பூட்டு அறிக்கை: மாணவர்கள் அதிகாரத்தை எதிர்த்து எதுவும் பேசிவிடக்கூடாது என்பதற்காகவே இந்த வாய்ப்பூட்டு அறிக்கை வந்துள்ளது.
- கண்டனம்: எவ்வளவு தூரம்தான் போவீர்கள் மிஸ்டர் விஜய் என நெல்சன் சேவியர் கேள்வியெழுப்பியுள்ளார்.
அரசின் இந்த அவசர சுற்றறிக்கையும், அதற்கு நெல்சன் சேவியர் வெளியிட்ட கண்டனப் பதிவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
