தூத்துக்குடி இளைஞர் உயிரிழப்பு: “தமிழ்நாட்டில் அரசு இருக்கிறதா?” – கனிமொழி கடும் விமர்சனம்
தூத்துக்குடியில் காவல்துறை விசாரணைக்குப் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, திமுக துணைப் பொதுச்செயலாளரும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நாகர்கோவிலைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் போலீஸ் சித்திரவதையால் மேலும் ஒரு இளைஞர் உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார். மேலும், “காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும்
“நிபந்தனைகள் விதித்து விவாதத்தை திசைதிருப்ப வேண்டாம்” – எதிர்க்கட்சிகளுக்கு கிரண் ரிஜிஜு வேண்டுகோள்
வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த தயாராக இருப்பதாகவும், அதற்கு தேவையற்ற நிபந்தனைகள் விதித்து விவாதத்தை திசைதிருப்ப வேண்டாம் என்றும் மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “மற்ற நாடாளுமன்ற நடவடிக்கைகளைவிட வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு முன்னுரிமை அளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. இந்த
நீட் எதிர்ப்பு போராட்டம்: பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர் தலைமையில் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம்
நீட் (NEET) தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன் மற்றும் அமீர் தலைமையில் இன்று (ஜூலை 23) சென்னையில் போராட்டம் நடைபெற உள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் இன்று மாலை 3 மணிக்கு இந்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் விவகாரம்: தர்மேந்திர பிரதான் ராஜினாமா கோரி புதுக்கோட்டையில் மாணவர்கள் போராட்டம்
நீட் (NEET) தேர்வு முறைகேடு விவகாரத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, புதுக்கோட்டையில் இந்திய ஜனநாயக மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள், “ஜனநாயகனா..? ஜனநாயகமா..? தமிழக மக்களின் தீர்ப்பு யார் பக்கம்?” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை
“மாணவர்கள் மீது தடியடி நடத்தும் நாடு தோல்வியடைந்துவிடுகிறது” – கமல்ஹாசன் உருக்கமான பதிவு
நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் அதற்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்று வரும் மாணவர் போராட்டங்கள் தொடர்பாக, ராஜ்யசபா உறுப்பினரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் உருக்கமான கருத்தை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு குழந்தை அழுதபோதே நாம் செவிசாய்ந்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக, நம் குழந்தைகளில் எண்ணற்றோர் இறக்கும் வரை நாம் காத்திருந்தோம்”
திருப்பரங்குன்றத்தில் நீட் எதிர்ப்பு ரயில் மறியல்; டெல்லி மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு
நீட் (NEET) தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்று வரும் மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் இந்திய மாணவர் சங்கம் (SFI) மற்றும் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் இணைந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக போராடி வரும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஒற்றுமை தெரிவிக்கும் வகையில் இந்த போராட்டம்
CJP போராட்டம்: ஊடகங்களின் செய்தி வெளியீடு குழப்பத்தை ஏற்படுத்தியது – விமர்சனம்
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) சார்பில் கடந்த ஜூலை 20 நடைபெற்ற பேரணி மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல்கள் குறித்து ஊடகங்கள் வெளியிட்ட செய்தி முறைகள் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன. இதுகுறித்து வெளியான கருத்தில், போராட்டம் நடைபெற்ற நேரத்தில் தொலைக்காட்சி ஊடகங்கள் நேரலையாக காட்சிகளை ஒளிபரப்பியது பார்வையாளர்களுக்கு சம்பவங்களை நேரடியாக அறியும் வாய்ப்பை வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், ஜூலை
மெரினா கடற்கரையில் கட்டுப்பாடுகள்: போராட்டம் அச்சத்தால் பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு
சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் போராட்டம் நடத்தக்கூடும் என்ற தகவலையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல காவல்துறை தற்காலிகமாக அனுமதி மறுத்துள்ளது. இதன் காரணமாக, உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை உள்ள அனைத்து முக்கிய நுழைவாயில்களும் மூடப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் மெரினா கடற்கரையில் ஒன்று கூடும் வாய்ப்பு இருப்பதாகக் கருதப்பட்டதால், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாமல்
டெல்லி மாணவர் போராட்டம்: போலீசார் பெல்லட் துப்பாக்கி பயன்படுத்தினரா? சிகிச்சையில் உள்ள போராட்டக்காரருக்கு பெல்லட் காயம் என தகவல்
டெல்லியில் ஜூலை 20 அன்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தின் போது போலீசார் நடத்திய நடவடிக்கையில் காயமடைந்த போராட்டக்காரர்களில் ஒருவருக்கு பெல்லட் (Pellet) துப்பாக்கியால் ஏற்பட்ட காயம் இருப்பதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் வெளியாகியுள்ளன. லேடி ஹார்டிஞ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த போராட்டக்காரருக்கு பெல்லட் காயம்
