முதல்வர் விஜய்யின் கடைசி திரைப்படம் ‘ஜன நாயகன்’ உலகம் முழுவதும் வெளியீடு
தமிழக முதலமைச்சர் விஜய் நடிகராக நடித்துள்ள கடைசி திரைப்படமான ‘ஜன நாயகன்’ இன்று (ஜூலை 23) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. நீண்டகாலமாக காத்திருந்த ரசிகர்கள், விஜய்யின் திரை உலகப் பயணத்திற்கு விடை கொடுக்கும் இந்தப் படத்தை காண அதிகாலை முதலே திரையரங்குகளில் திரண்டனர். முதலில் அறிவிக்கப்பட்ட வெளியீட்டு தேதி பல்வேறு காரணங்களால் மாற்றப்பட்ட நிலையில், ஜூலை 15 அன்று
தர்மேந்திர பிரதான் ராஜினாமா கோரி எதிர்க்கட்சி போராட்டம்; நாடாளுமன்றத்தில் ஆளும்-எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போட்டி ஆர்ப்பாட்டம்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சி கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட இந்தியா (INDIA) கூட்டணி கட்சிகளின் மூத்த தலைவர்கள் மற்றும் எம்.பி.க்கள் பங்கேற்று, நீட் தேர்வு முறைகேடுகள்
தூத்துக்குடியில் மீண்டும் காவல் மரணமா? விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு; குடும்பத்தினர் போராட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் விசாரணைக்காக போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் 26 வயதான அருணாச்சலம் என்ற இளைஞர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த உயிரிழப்பு காவல்துறை தாக்குதலால் ஏற்பட்டதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ள நிலையில், உடலைப் பெற மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவலின்படி, அருணாச்சலம் என்பவரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத்
திமுக என்றைக்கும் முன் வரிசையில் வாள் தூக்கி நிற்கும்-உதயநிதி ஸ்டாலின்
நீட் (NEET) தேர்வு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கட்டுரையை மேற்கோள் காட்டி, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், NEET தேர்வு முறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தி இந்து (The Hindu) நாளிதழில் மு.க.ஸ்டாலின் எழுதிய கட்டுரை, “NEET தேர்வில் மட்டுமல்ல, NEET தேர்வே ஒரு
நீட் வினாத்தாள் கசிவு: விரைவு நீதிமன்றங்கள் மட்டும் போதாது; தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் – சி.ஜே.பி.
நீட் (NEET) வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்குகளை விசாரிக்க நாடு முழுவதும் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) நிராகரித்துள்ளது. இது தொடர்பாக சி.ஜே.பி. வெளியிட்டுள்ள பதிவில், நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் விரைவு நீதிமன்றங்களை அமைப்பது மட்டுமே தீர்வாக இருக்காது என்றும், இந்த விவகாரத்திற்கு அரசியல் மற்றும்
நீட் எதிர்ப்பு போராட்டம்: “இந்திய மாணவர்களுடன் கைகோர்த்து நிற்கிறேன்” – இயக்குநர் மாரி செல்வராஜ்
நீட் (NEET) தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு ஆதரவாக இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவு அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. அவரது பதிவில், “அதிகார அடக்குமுறைக்கு எதிரான குரல் எத்திசையில் இருந்து ஒலித்தாலும், அத்திசைக்கு பெரும் நம்பிக்கையையும் வலிமையையும் சேர்ப்பதே என் கலையின்
சி.ஜே.பி. போராட்டத்தில் குழப்பம் ஏற்படுத்த பாஜக முயற்சி? – அபிஜித் திப்கே குற்றச்சாட்டு
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) போராட்டத்தில் வெளிநபர்களை அனுப்பி திட்டமிட்டு குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாக அக்கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே குற்றம்சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த ஒரு மாதமாக நாங்கள் அமைதியான முறையில் இங்கு போராட்டம் நடத்தி வருகிறோம். இந்த ஒரு மாத காலத்தில் இதுபோன்ற எந்தச் சம்பவமும் நடைபெறவில்லை.
நயா பாரதத்தில் பெரும் கேள்வி! மத்திய அமைச்சரவை மாற்றம் ஏன் இன்னும் நடக்கவில்லை? பாஜக தேசியத் தலைவரின் புதிய நிர்வாகிகள் தேர்வு தாமதம் ஏன்?
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், பெருமளவில் பேசப்பட்ட மத்திய அமைச்சரவை மாற்றம் ஏன் இன்னும் நடைபெறவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. ஷெர்லாக் ஹோம்ஸ் பாணியில் எழும் நயா பாரதத்தின் அரசியல் கேள்வி; மத்திய அமைச்சரவை மாற்றம் மற்றும் பாஜக புதிய நிர்வாகிகள் தேர்வு தாமதம்! அமைச்சரவை மாற்றம் மற்றும் கட்சி நிர்வாகிகள் தேர்வு குறித்து எழுந்துள்ள முக்கியக் கேள்விகளின்
திமுக ஆட்சியிலும் தவெக ஆட்சியிலும் சட்டமன்ற கூட்டத்தொடர்: சமூக வலைதளங்களில் வைரலாகும் ஒப்பீடு
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் தொடர்பான 2023 மற்றும் 2026-ஆம் ஆண்டுகளின் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்புகளை ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் புதிய விவாதம் எழுந்துள்ளது. வைரலாகி வரும் பதிவுகளில், 2023-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட சட்டமன்ற அறிவிப்பில், “மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் கூட்டியுள்ளார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அதன்படி 2023-2024-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 20-ஆம் தேதி பேரவையில் தாக்கல்
திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை நேரில் சந்தித்த கனிமொழி எம்.பி.
கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை, திமுக துணைப் பொதுச்செயலாளரும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, மார்க்கண்டேயனின் உடல்நிலை மற்றும் சிறை வசதிகள் குறித்து கனிமொழி எம்.பி. கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவருக்கு தேவையான சட்ட உதவிகள் மற்றும் கட்சியின் முழுமையான ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும்
