தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு: முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க தி.மு.க வலியுறுத்தல்!
கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, புதரில் வீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. வட மாநிலங்களில் எங்கோ தூரத்தில் நடப்பதாக நாம் செய்திகளில் படித்துக் கடந்துபோன இத்தகைய கொடூரக் குற்றங்கள், இன்று இந்த #SofaModel ஆட்சியில் தமிழ்நாட்டில் தினசரி தொடர்கதையாக மாறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

தொடர்கதையாகும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்
தேர்தல் பிரச்சாரங்களின் போது சட்டத்திற்குப் புறம்பாக வாக்கு சேகரிப்பதற்கான ஒரு கருவியாக (Tool) குழந்தைகளைப் பயன்படுத்திய முதலமைச்சர், நடைமுறையில் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பில் தொடர்ந்து கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து அரங்கேறும் சம்பவங்கள் இதற்கு சான்றாக அமைந்துள்ளன:
- சேலம் கொடூரம்: சேலத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஆளுங்கட்சியைச் சேர்ந்தவரே பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்.
- ஆலந்தூர் அத்துமீறல்: ஆலந்தூரில் ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர், கணவனை இழந்த பெண்ணிடம் அத்துமீறி அராஜகம் செய்தது.
- பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லை: ‘சிங்கப்பெண்’ படையை உருவாக்கிய சில தினங்களிலேயே சிவகங்கையில் பெண் காவலருக்கே பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்.

வென்டிலேட்டரில் சட்டம் – ஒழுங்கு
தமிழகம் முழுவதும் சட்டம் – ஒழுங்கு என்பது வென்டிலேட்டரில் வைக்கும் அளவுக்கு முழுமையாகச் செத்துக் கொண்டிருக்கிறது. புதிய ஆட்சி அமைந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும், சட்டம் – ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் எந்தவொரு உறுதியான நடவடிக்கையையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
மாற்றுக்கட்சி ஆட்களைத் தங்கள் பக்கம் இழுப்பதில் (Purchase) காட்டும் அக்கறையில், கொஞ்சமாவது சட்டம் – ஒழுங்கைப் பாதுகாப்பதில் (Protect) முதலமைச்சர் காட்ட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

உடனடி தேவை: உயர்மட்டக் கூட்டம்
தமிழ்நாட்டில் மேலும் சீரழிந்து வரும் சட்டம் – ஒழுங்கைக் காப்பாற்ற முதலமைச்சர் உடனடியாக காவல்துறை உயர் அதிகாரிகளின் உயர்மட்டக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். மண்டல மற்றும் மாவட்ட அளவிலான காவல்துறை அதிகாரிகளுக்கு, குற்றங்களைத் தடுப்பதற்கான கடுமையான உத்தரவுகளை முதலமைச்சர் பிறப்பிக்க வேண்டும்.
கடைசி எச்சரிக்கை: இச்சம்பவத்தில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்துக் கடுமையான தண்டனையைக் காவல்துறை பெற்றுத்தர வேண்டும். இனியும் இது போன்ற கொடூரக் குற்றச்சம்பவங்கள் தொடர்ந்தால், எங்கள் தலைவரின் அனுமதியைப் பெற்று, மக்களைத் திரட்டி வீதியில் இறங்கிப் போராடவும் தி.மு.கழகம் தயங்காது!
