தெருக்குறள் அறிவு கைது: தமிழக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்
Tamilnadu

தெருக்குறள் அறிவு கைது: தமிழக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்

Jul 21, 2026

நீட் (NEET) தேர்வுக்கு எதிராக குரல் எழுப்பியதற்காக ராப் பாடகரும் சமூக ஆர்வலருமான ‘தெருக்குறள்’ அறிவு கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், தமிழக அரசுக்கு எதிராக திமுக இளைஞரணிச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நீட் தேர்வுக்கு எதிராகக் குரல் கொடுத்ததற்காக, ராப் பாடகரும் என் அன்புச் சகோதரருமான தெருக்குறள் அறிவைக் கைது செய்த விஜய் தலைமையிலான தமிழக அரசை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தெருக்குறள் அறிவின் குரல் தமிழ்நாட்டின் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளையும் கோரிக்கைகளையும் பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீட் தேர்வு முறைகேடுகளால் நிறைந்ததுடன், அது ஒரு மோசடியாகவும் மாறிவிட்டதாக குற்றம்சாட்டிய உதயநிதி ஸ்டாலின், அந்தத் தேர்வுக்கு எதிராக எழுப்பப்படும் குரல்களை ஒடுக்காமல், அவற்றைக் கேட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தெருக்குறள் அறிவு கைது மற்றும் நீட் எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் தொடர்ந்து தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *