ரூ.3,000 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட 75 அமிர்த் பாரத் ரயில் நிலையங்கள் இன்று திறப்பு; சென்னை பூங்கா நிலையத்தையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி
நாடு முழுவதும் சுமார் ரூ.3,000 கோடி செலவில் அதிநவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட 75 அமிர்த் பாரத் ரயில் நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த ரயில் நிலையங்கள், பயணிகளுக்கான நவீன வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற அணுகுமுறை, மேம்படுத்தப்பட்ட காத்திருப்பு அரங்குகள், டிஜிட்டல் தகவல் அமைப்புகள், சுத்தமான நடைமேடைகள் மற்றும் அழகுபடுத்தப்பட்ட கட்டமைப்புகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
