தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்திய முதல்வர் விஜய்
தமிழக முதலமைச்சர் விஜய், இந்திய விடுதலைப் போராட்டத்திற்காகவும், மக்களின் உரிமைகளுக்காகவும் தங்களது இன்னுயிரை அர்ப்பணித்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆர்யா, சங்கரலிங்கனார், செண்பகராமன் உள்ளிட்ட தியாகிகளின் தியாகத்தையும், நாட்டுக்காக அவர்கள் ஆற்றிய அர்ப்பணிப்பையும் நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தியுள்ளார்.
மேலும், தியாகிகளின் உயரிய பண்புகள், தன்னலமற்ற சேவை உணர்வு மற்றும் நாட்டுப்பற்றை அனைவரும் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், மனிதநேயம், சமூக நீதி மற்றும் நாட்டுப்பற்று ஆகிய உயரிய மதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு புதிய சமுதாயத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் விஜய் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
