அதிமுகவில் அதிரடி சமரசம்! எடப்பாடி பழனிசாமியைச் சட்டமன்றக் குழு தலைவராக்க சபாநாயகரிடம் கடிதம்!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் நிலவி வந்த உட்கட்சி மோதல்கள் தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளன. தனியாகச் செயல்பட்டு வந்த எஸ்.பி.வேலுமணி அணியினர் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியுடன் இணைந்துள்ளனர். இரு அணிகளும் ஒன்றுபட்டதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை அதிமுக சட்டமன்றக் குழு தலைவராக்கச் சபாநாயகரிடம் கூட்டாகக் கடிதம் அளித்துள்ளனர். இரண்டு அணிகளாகப் பிரிந்த அதிமுக
