“யாரையும் புண்படுத்திப் பேச வேண்டாம்!” விசிக, முஸ்லிம் லீக் அமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
Politics

“யாரையும் புண்படுத்திப் பேச வேண்டாம்!” விசிக, முஸ்லிம் லீக் அமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

May 22, 2026

தமிழக வெற்றிக் கழக (தவெக) அமைச்சரவையில் புதிய அமைச்சர்களாக விசிக-வின் வன்னியரசு மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஷாஜஹான் ஆகியோர் இன்று பொறுப்பேற்றுள்ளனர். நீண்ட காலமாக திமுக கூட்டணியில் இருந்த இக்கட்சிகள் தவெக அரசுடன் கைகோர்த்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சூழலில், திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் மிக முக்கியமான வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம்: தொண்டர்களுக்கு அறிவுரை

புதிய அமைச்சர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், திமுக தொண்டர்கள் கண்ணியம் காக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அவரது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவின் விவரம் இதோ:

“மாண்புமிகு அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் திரு. வன்னியரசு அவர்களுக்கும், திரு. ஷாஜஹான் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை அந்தந்த கட்சிகளுக்கு முழுமையாக உண்டு. எனவே, நமது கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி சமூக வலைதளங்களிலோ அல்லது வெளியிலோ கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம்.”

ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்!

தொடர்ந்து பேசிய அவர் திமுக-வின் அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார். “நாம் அனைவரும் பேரறிஞர் அண்ணாவின் வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞரின் வழியிலும் வந்தவர்கள் ஆவோம். அந்த அரசியல் நாகரிகத்தை நாம் எந்நாளும் மறந்திடக் கூடாது.

மக்களுக்கான நல்ல திட்டங்களைப் பாராட்டி, அல்லதை முழு வீரியத்துடன் விமர்சிப்போம். தமிழ்நாட்டின் நன்மைகளுக்காக எப்போதும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக நாம் தொடர்ந்து செயல்படுவோம்” என்று மு.க.ஸ்டாலின் தனது பதிவில் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் இந்த நாகரிகமான அரசியல் பதிவு தற்போது இணையத்தில் அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *