“அஜித்பவாரின் சொத்து வழக்கில், ‘வருமான வரித்துறை முன்வைத்த குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இல்லை’ என்று தீர்ப்பாயம் தெரிவித்தது.”
2021ல், அஜித்பவாரின் பெயருக்கு பினாமி சொத்து புகாரை அடுத்து, வருமான வரித்துறை ரெய்டில் ₹1000 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
2023-ல் மகாராஷ்டிரா தேசியவாத காங்கிரஸ் கட்சியை இரண்டாகப் பிரித்து தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பாஜக கூட்டணியில் இணைந்த அஜித்பவார், துணை முதல்வராக பதவியேற்றார். பின்னர் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
முதல்வர் பதவிக்கான விவாதத்தில் தேவேந்திர பட்னாவிஸ் மீது ஆதரவை தெரிவித்த அஜித்பவார், பதவியேற்பு நிகழ்ச்சியில் மீண்டும் துணை முதல்வராக தேர்வானார். ஆனால், 2021-ல் மகாவிகாஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது அஜித்பவாருக்கு பினாமி சொத்துக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து வருமான வரித்துறை ரெய்டு நடத்தி, அவரது சர்க்கரை ஆலை, டெல்லி வீடு, கோவா ரிசார்ட் உள்ளிட்ட ரூ.1000 கோடி மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்தது.
இந்த நடவடிக்கைக்கு எதிராக அவர் பினாமி சொத்து பரிவர்த்தனை தடுப்பு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தார். விசாரணையில், அஜித்பவார் சொத்துகளை வாங்க சட்டப்படி பணம் செலுத்தியதாகவும், பினாமி சொத்துக்கு ஆதாரம் இல்லை என்றும் தீர்ப்பாயம் முடிவெடுத்தது. பறிமுதல் சொத்துகள் திருப்பி வழங்கப்பட்டன.
இதற்கு முன்னதாக, மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் நடந்த ஊழல் வழக்கில் அமலாக்கப் பிரிவின் நடவடிக்கையிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், “வருமான வரித்துறை மற்றும் அமலாக்கப் பிரிவு நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கவே அஜித்பவார் பாஜக கூட்டணியில் சேர்ந்தார்” என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
