காலையில் டெண்டர்; மாலையில் பணி ஆணை! புஸ்சி ஆனந்த் துறையில் அதிரடி காட்டிய 6 மணி நேர டெண்டர் சர்ச்சை!
தமிழகத்தில் புதிய ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அரசின் ஊரக உள்ளாட்சித் துறையில், உலகிலேயே முதல்முறையாக காலையில் டெண்டர் கோரப்பட்டு, மாலையிலேயே பணி ஆணை (Work Order) வழங்கப்பட்ட வினோத சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. 6 மணி நேரத்தில் முடிந்த இ-டெண்டர் நடைமுறை! காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் பஞ்சாயத்து யூனியன் வட்டார வளர்ச்சி
