விசாரணைக் கைதிகளால் திணறும் இந்தியச் சிறைகள்! கொள்ளளவை மீறிய நெரிசல்! அதிர வைக்கும் என்சிஆர்பி தரவுகள்!
இந்தியாவில் உள்ள மத்திய மற்றும் மாவட்டச் சிறைகள் அனைத்தும் தங்களது கொள்ளளவை விடக் கூடுதல் கைதிகளுடன், மிகக் கடுமையான நெரிசலில் சிக்கித் திணறி வருகின்றன. தேசிய குற்றப் பதிவுக் கழகம் (NCRB) வெளியிட்டுள்ள சமீபத்திய சிறைப் புள்ளிவிவர அறிக்கையின்படி, இந்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்தியச் சிறைகளில் இத்தகைய நெரிசல் தொடர்வதற்குக் குற்றவாளிகளை விட, ‘விசாரணைக் கைதிகளின்’ (Undertrials)
