தமிழகம் முழுவதும் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்? – கோழி வணிகர்கள் அதிரடி முடிவு
தமிழகம் முழுவதும் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனையை நிறுத்த தமிழ்நாடு கோழி வணிகர் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. தஞ்சையில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாவது, கோழி உற்பத்தியாளர்கள் விற்பனைக்கு அனுப்பும் முன் கோழிகளுக்கு கழுத்து வரை தீவனம் அளித்து அனுப்புவதால், அவற்றின் கழிவுகள் இறைச்சியில் கலக்கும் நிலை ஏற்படுகிறது. இது உணவுப்
மகாராஷ்டிராவில் 2.3 கோடி லிட்டர் கலப்பட பால் விநியோகம்? டிடெர்ஜென்ட், பாமாயில் கலந்து தயாரித்ததாக அதிர்ச்சி தகவல்
மகாராஷ்டிராவில் டிடெர்ஜென்ட் மற்றும் பாமாயில் கலந்து தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் 2.3 கோடி லிட்டர் கலப்பட பால் மாநிலம் முழுவதும் விநியோகிக்கப்பட்டதாக போலீஸ் விசாரணையில் வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையின்படி, செயற்கையாக தயாரிக்கப்பட்ட இந்த கலப்பட பாலில் டிடெர்ஜென்ட், பாமாயில் உள்ளிட்ட ஆபத்தான பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த பால் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில்
அமெரிக்காவில் நச்சுப் பூஞ்சை கடத்தல் குற்றச்சாட்டுகள்: சீன நாட்டவர்கள் மீது வழக்கு, உலக வேளாண்மை மற்றும் உடல்நலத்திற்கு ஏற்படும் அபாயங்கள்!
அமெரிக்காவை உலுக்கிய புதிய விவகாரத்தில், இரண்டு சீன நாட்டவர்கள் Fusarium graminearum எனப்படும் நச்சுப் பூஞ்சையை சட்டவிரோதமாக கடத்தியதாக அமெரிக்க அரசு குற்றம் சுமத்தியுள்ளது. அமெரிக்க புலனாய்வுத் துறை (FBI) இதை “வேளாண் பயங்கரவாதம்” எனக் குறிப்பிட்டு, இது ஆண்டுதோறும் உலகளவில் பில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பிற்கு காரணமாக இருப்பதாக எச்சரித்துள்ளது. யார் இந்த சீன சந்தேகத்தினர்கள்? அமெரிக்க நீதித்துறையின்
