பிரதமர் மோடி அவர்கள் ஆட்சி அமைத்து கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் ஆகிறது.ஆனால் மாநில அரசுகளின் வளர்ச்சிக்கு ஏன் ? துணையாக இருப்பதில்லை என்பது குறித்து விமர்சனங்கள் தொடர்ந்து வந்த வண்ணமே உள்ளன.
தற்பொழுது டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் கலந்து கொண்டதை எதிர்க்கட்சித் தலைவர்களான எடப்பாடியார் , த. வே.க தலைவரான விஜய் போன்றோர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர் .ஆனால் இக்கேள்விகளுக்கு பதிலடியாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் .. ” நான் சென்றது தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய நிதியை ஒன்றிய பாஜக அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ளது அதனை பெறுவதற்காகவும் மாநிலங்களுக்கான நிதி பகிர்வை 50% உயர்த்துவதற்காகவும் தான் சென்றேன்.
அங்கு சென்றது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை நிறைவேற்றுவதற்கு கோரிக்கைகளையும் கொடுத்து இருக்கிறேன் என்று தெரிவித்தார். இந்நிலையில் நிதி திட்ட குழு தலைவர் சுப்பிரமணியம் பிரதமர் ரகசியமாக அழைத்து நிதியை தர வேண்டாம் என்றுக் கூறியதை பொதுப்படையாக தெரிவித்துவிட்டார். இதனால் பரபரப்பு சம்பவம் நிலவி. . மோடி மீது பலர் ஆதங்கத்தை விமர்சனத்தை தெரிவித்து வருகின்றனர். ஒரு நாட்டின் பிரதமராக இருக்கக்கூடிய மோடி அவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது குற்றமானது ஆகவே இதற்கான தண்டனையை வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர்.
நிதியை தராமலும் புதுப்புது திட்டங்களை செலுத்தி மாநில அரசுகளை சீர்குலைக்கிற வகையில் ஒன்றிய அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி கொடுக்க வேண்டும். இந்தியா வளர்ச்சி அடைய வேண்டும் என்று கூறிய பிரதமர் மற்ற மாநிலங்கள் அனைத்தும் வளர்ச்சி அடைந்தால் தான் இந்தியா வளர்ச்சி அடையும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று முதல்வர் கூட்டத்தில் தெரிவித்திருந்த நிலையில் தற்போது நடந்த விவகாரம் குறித்து சமுதாயத்தில் பலர் கேள்வி எழுப்பும் நிலையில் அதற்கும் மௌனம் சாதிக்கிறாரா மோடி?