2014 முதல் 2016 வரை கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் 982 பக்க அறிக்கையை தொல்லியல் நிபுணர் அமர்நாத் ராமகிருஷ்ணன் 2023 ஜனவரியில் இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்திற்கு (ASI) சமர்ப்பித்தார். இந்த அறிக்கையில், சங்க காலத்திற்கும் முந்தைய நகரமயமான தமிழ்ச் சமூகத்தின் ஆதாரங்கள் உள்ளன எனக் கூறப்பட்டுள்ளன.
இந்நிலையில் அறிக்கை சமர்ப்பித்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வறிக்கையில் உள்ள தரவுகளை மாற்றி அமைத்து தர வேண்டும் என்று மத்திய அரசாங்கத்தால் சொல்லப்பட்டிருக்கிறது. மதுரை எம்பி வெங்கடேசன் தொடர்ந்து தொல்லியல் அறிக்கையை வெளிடாதது குறித்து கேள்வி எழுப்பியதால் இத்தகு கடிதம் மத்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்டிருக்கின்றன.
982 பக்கங்கள் இன்னும் புத்தகம் ஆகாமலே உள்ளது. தமிழரின் தொன்மையை , தொல்லியல் நிபுணர் அமர்நாத் பாலகிருஷ்ணன் செய்த ஆய்வை ஒன்றிய பாஜக அரசாங்கம் நிராகரிக்கிறதா? அல்லது ஏன் இவ்வளவு நாள் தள்ளிப் போடுகிறது.
பாரத பிரதமர் தமிழ் தான் சிறந்த மொழி என செல்லும் இடமெல்லாம் தமிழை சிறப்பாக பேசுவது மட்டும் இல்லாமல் திருக்குறளையும் உதாரணமாக பயன்படுத்தி பேசி வருகிறார். ஆனால் தமிழ்நாட்டு தொல்லியல் நிபுணர் சமர்ப்பித்த அறிக்கையை தாமதப்படுத்துவது ஏன்? இதற்கு நிச்சயமாக மத்திய அரசாங்கம் பதிலளித்தே ஆக வேண்டும்.
இப்பொழுது மத்திய அரசாங்கத்தால் வந்திருக்கிற கடிதம் கூட அடுத்து ஊட்டியில் நடக்கிற பாராளுமன்ற கமிட்டியில் தமிழ்நாடு அரசாங்கம் தொடர்ந்து கேள்வி எழுப்பும் போராட்டம் நடக்கும், என்பதற்கான கண்துடைப்பாகத்தான் இக்கடிதம் உள்ளது. ஆக தொல்லியல் துறைக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்துகிறதா பாஜக? இதற்கும் மௌனம் தெரிவித்தால் தமிழ்நாட்டு மீதான வன்மம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.