CJP பக்கங்களை முடக்கத் திட்டம்! பா.ஜ.க மீது காக்ரோச் ஜனதா கட்சித் தலைவர் அபிஜீத் திப்கே அதிரடி குற்றச்சாட்டு!
National

CJP பக்கங்களை முடக்கத் திட்டம்! பா.ஜ.க மீது காக்ரோச் ஜனதா கட்சித் தலைவர் அபிஜீத் திப்கே அதிரடி குற்றச்சாட்டு!

May 21, 2026

இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் இயக்கமான காக்ரோச் ஜனதா கட்சி (CJP) தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. தங்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களை முடக்கச் சதி நடப்பதாக அதன் நிறுவனத் தலைவர் அபிஜீத் திப்கே பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

பா.ஜ.க-வை விட அதிக ஃபாலோயர்கள்: சாதனை படைத்த CJP

இந்தியாவில் நிலவி வரும் கடுமையான வேலைவாய்ப்பின்மை பிரச்சினையை மத்திய பா.ஜ.க அரசுக்கு உணர்த்த இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. வெறும் சாட்டைர் (Satire) மீம் பக்கமாகத் தொடங்கப்பட்ட இந்த காக்ரோச் ஜனதா கட்சி, குறுகிய காலத்தில் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது இந்த CJP பக்கங்கள் ஆளும் பா.ஜ.க-வின் அதிகாரப்பூர்வ பக்கங்களை விட அதிக பின்தொடர்பாளர்களைப் (Followers) பெற்று இணையத்தில் சாதனை படைத்து வருகின்றன. இந்த அசுர வளர்ச்சி தான் தற்போதைய அரசியல் சலசலப்புக்குக் காரணமாக அமைந்துள்ளது.

சமூக வலைதளப் பக்கங்களை முடக்கத் திட்டம்?

CJP பக்கங்களுக்குக் கிடைத்து வரும் பிரம்மாண்ட ஆதரவு ஆளும் தரப்பிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே தங்களது கணக்குகளை முடக்கத் திட்டமிடுகிறார்கள் என அபிஜீத் திப்கே தெரிவித்துள்ளார்.

இது குறித்துப் பேசிய அவர், “மக்களின் உண்மையான குரலை நசுக்கப் பார்க்கிறார்கள். எங்களின் சமூக வலைதளப் பக்கங்களை முடக்கத் திட்டமிடுகிறார்கள்” எனப் பா.ஜ.க மீது நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம் இணையத்தில் #CockroachJanataParty என்ற ஹாஷ்டேக்குடன் மீண்டும் பெரிய அளவில் ட்ரெண்டாகத் தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *