அமெரிக்காவில் இந்திய வம்சாவளி நபர் கொலை: டிரம்ப் கண்டனம்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், பெங்களூருவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி நபர் சந்திரமௌலி நாகமல்லையா (50), ஒரு ஊழியரால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். இந்தக் கொடூரமான படுகொலைக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். கொலையைச் செய்தவர் ஒரு கியூப குடியேறி என்றும், இது நாட்டின் குடியேற்றக் கொள்கை குறித்துப் பல கேள்விகளை எழுப்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
