மாட்டிக் கொண்டாரா பெரியார்? (19)
அண்மையில் ஒரு நாள் பெங்களூருவில் ஒரு மாந்தவுரிமைக் கருத்தரங்கில் பேராசிரியர் ஒருவர் தொழிற்சங்க உரிமைகளின் வரலாறு குறித்துப் பேசிக் கொண்டிருந்தார். உழைக்கும் மக்களின் உரிமைப் போராட்டம் அடிமைகளின் கலகத்திலிருந்து தொடங்கியது என்று கூறி, ரோமாபுரியில் ஸ்பார்ட்டகஸ் தலைமையில் அடிமைகள் தொடுத்த போரை எடுத்துக்காட்டினார். பார்வையாளனாக முன்வரிசையில் அமர்ந்திருந்த நான்… கார்ல் மார்க்ஸ் தனக்குப் பிடித்தமான வரலாற்று வீரனாக ஸ்பார்ட்டகசைக் கருதியதையும்,