ஒடிசாவில் ரத யாத்திரை சர்ச்சை: அதானிக்காக ரத இழுப்பதைத் தாமதப்படுத்தியதா பாஜக அரசு? எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!
ஒடிசாவில் உள்ள பூரி ஜெகன்நாதர் கோயிலின் வருடாந்திர ரத யாத்திரையின் போது, ஜெகன்நாதர் மற்றும் அவரது சகோதர, சகோதரிகளின் தேர்களை இழுப்பதில் வேண்டுமென்றே தாமதம் ஏற்பட்டதாக ஆளும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அரசு மீது எதிர்க்கட்சிகள் கடும் குற்றம் சாட்டியுள்ளன. தொழிலதிபர் கௌதம் அதானி குடும்பத்தினர் தேர்களை இழுக்க அனுமதிக்கும் நோக்கத்திலேயே இந்தத் தாமதம் ஏற்பட்டதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.