தந்தை கண்முன்னே 13 வயது மகனைச் சுட்டுக் கொன்ற இஸ்ரேல் படை – மேற்கு கரையில் பதற்றம் அதிகரிப்பு
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. பாலத்தீன மக்கள் தங்கள் சொந்த நிலத்திலேயே கடுமையான ஆக்கிரமிப்புகளையும், வன்முறையையும் எதிர்கொள்கின்றனர். சமீபத்தில், ஜெனின் அகதிகள் முகாமின் நுழைவாயிலில், 13 வயது சிறுவன் இஸ்லாம் தனது தந்தை அப்தெல் அஜீஸ் மஜர்மே கண்முன்னே இஸ்ரேலியப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டான். “என் மகன் தரையில் சரிந்தான். ஒரு துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டது.
இந்தியா – இஸ்ரேல் ஒப்பந்தம்: சர்வதேச அமைப்புகள் கண்டனம்
சமீபத்தில் இந்தியா-இஸ்ரேல் இடையே கையெழுத்தான இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் (Bilateral Investment Treaty – BIT) குறித்து நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய அமைப்புகளும் தனிநபர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த ஒப்பந்தம், காசாவில் இஸ்ரேல் நிகழ்த்தி வரும் இனப்படுகொலை, பாலஸ்தீன ஆக்கிரமிப்பு மற்றும் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு இந்தியா உடந்தையாக இருப்பதற்கான ஒரு தெளிவான அறிகுறி என்று அவர்கள் ஒரு கூட்டறிக்கையில்
இஸ்ரேலிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் நுழைவதைத் தடைசெய்யும் வகையில் மாலத்தீவுகள் குடிவரவுச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
புது தில்லி: செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 15) மாலத்தீவுகள் இஸ்ரேலிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடைசெய்தது. வாக்களிக்கும் செயல்பாட்டில் பங்கேற்ற அனைத்து எம்.பி.க்களின் ஒருமித்த வாக்குகளுடன் அதன் நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவை நிறைவேற்றியது. அதன்பிறகு, மாலத்தீவுகளின் ஜனாதிபதி முகமது முய்சு, நாட்டின் குடிவரவுச் சட்டத்தில் திருத்தங்களை அங்கீகரித்தார். ஜனாதிபதி அலுவலக வலைத்தளத்தின்படி, இந்தச் சட்டத்தின் ஒப்புதல் “பாலஸ்தீன மக்களுக்கு எதிராக
