தமிழகத்தில் தனியார் நிறுவனங்களின் பால், தயிர் விலை உயர்வு; லிட்டருக்கு ₹2 முதல் ₹4 வரை அதிகரிப்பு
தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்கள் பால் மற்றும் தயிரின் விலையை மீண்டும் உயர்த்தியுள்ளன. இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக விலை உயர்த்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அமிர்தா, திருமலா, ஜெர்சி, ஹெரிடேஜ், வேதா, சக்ரா உள்ளிட்ட பல்வேறு தனியார் பால் நிறுவனங்கள் தங்களது பால் மற்றும் தயிர் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய விலை
