மகாராஷ்டிராவில் 2.3 கோடி லிட்டர் கலப்பட பால் விநியோகம்? டிடெர்ஜென்ட், பாமாயில் கலந்து தயாரித்ததாக அதிர்ச்சி தகவல்
மகாராஷ்டிராவில் டிடெர்ஜென்ட் மற்றும் பாமாயில் கலந்து தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் 2.3 கோடி லிட்டர் கலப்பட பால் மாநிலம் முழுவதும் விநியோகிக்கப்பட்டதாக போலீஸ் விசாரணையில் வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையின்படி, செயற்கையாக தயாரிக்கப்பட்ட இந்த கலப்பட பாலில் டிடெர்ஜென்ட், பாமாயில் உள்ளிட்ட ஆபத்தான பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த பால் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில்
