எம்எல்ஏவை கைது செய்ய திராணி இருக்கிறதா? ‘சிங்கப்பெண்’ வழக்கில் விஜய் அரசுக்கு எடப்பாடி பழனிசாமி அதிரடி சவால்!
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தவெக (TVK) நிர்வாகிகளால் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரம் தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் விஜயை சீறிய அதே வேளையில், தற்போது அதிமுக (AIADMK) பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் (Edappadi Palanisamy) இந்த விவகாரத்தில் அதிரடியாகக் களமிறங்கியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டுத்
