“போலீசார் லஞ்சம் கேட்டால் புகார் அளிக்கலாம்!” – சென்னை பெருநகர காவல் துறையில் ‘ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு’ தொடக்கம்!
காவல்துறையில் லஞ்சத்தைத் தடுக்கச் சென்னை பெருநகர காவல் துறையில் “ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு” ஒன்று புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது. “78717-23000 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்!” – காவல் ஆணையாளர் அறிவிப்பு! சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பின் விவரங்கள் இதோ: “காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை லஞ்சம் வாங்குவதைத் தடுக்க ‘ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு’ தொடங்கப்பட்டு உள்ளது.
