மாட்டிக் கொண்டாரா பெரியார்? (22)
தந்தை பெரியார் மீது சீமான் பரப்பிய அவதூற்றை மறுக்குமுகத்தான் இந்த இடுகைத் தொடரை எழுதத் தொடங்கினேன். ஆனால் இடைக்காலத்தில் அன்பர்கள் இட்ட பின்னூட்டங்களால் இந்த உரையாடல் சற்றே திசைமாறிப் போய் விட்டது. மார்க்சின் பால் நேசமும் மார்க்சியத்தின் பால் நாட்டமும் கொண்ட சில தோழர்கள் மார்க்ஸ் அல்லாத முற்போக்குச் சிந்தனையாளர்களையும் மார்க்சியமல்லாத சிந்தனை மரபுகளையும் அறிந்தேற்க மறுப்பதாக எனக்குத் தோன்றியது.
பொதுமைக் கொள்கையை ஏற்று வாழ்தல் சிறப்பானது. அறிவியல் நோக்கிலான பொதுமைக் கொள்கையாகிய மார்க்சியத்தைப் பற்றி நிற்கிற எவரும் அது குறித்துப் பெருமை கொள்வது சரியானது, முறையானது. இது அறமும் அறிவும் சார்ந்த பெருமை, ஆனால் அடக்கத்தை உதறி விட்டுத் தானே சரி, தான் மட்டுமே சரி என்று மமதை கொள்வதற்கு இது நியாயமாகாது. மார்க்சியம் அதனளவில் முக்காலும் பொருந்தும் பேறுடைத்த
Recent Posts
- ராகுல் காந்தி ‘அணு குண்டு’ ஆதாரம்: பாஜக-வுக்காக ‘வாக்கு திருட்டு’ – தேர்தல் ஆணையம் மீது பகீர் குற்றச்சாட்டு!
- டிரம்ப் வரிகளின் இறுதி எச்சரிக்கை: இந்தியாவின் மூலோபாய ஒற்றுமைக்கான தருணம் !
- “இந்தியப் பொருளாதாரம் இறந்துவிட்டது!” – டிரம்ப் விமர்சனத்தை ஆவேசமாக ஆதரித்த ராகுல் காந்தி!
- நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி ஆவேசம்: ‘ஆபரேஷன் சிந்தூர் ஒரு பிம்ப அரசியல் நாடகம்!’
- நாடாளுமன்றத்தில் கனிமொழி ஆவேச உரை: பாதுகாப்பு, வரலாறு, வெளியுறவுக் கொள்கை மீது சரமாரி கேள்விகள்!