“திமுக தனித்து தான் போட்டியிட வேண்டும்!” களஆய்வுக் குழுவிடம் திமுக தொண்டர்கள் அதிரடி முழக்கம்!
கடந்த சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, திமுக (DMK) தலைமை தனது கட்சிக் கட்டமைப்பை பலப்படுத்த தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தேர்தல் தோல்விக்கான உண்மையான காரணங்களைக் கண்டறிய திமுக தலைமை சார்பில் பிரத்யேகக் களஆய்வுக் குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இக்குழுவினர் தொகுதி வாரியாகச் சென்று நேரடியாக நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், திமுக தொண்டர்கள் தங்களது
