தூத்துக்குடி இளைஞர் உயிரிழப்பு: “தமிழ்நாட்டில் அரசு இருக்கிறதா?” – கனிமொழி கடும் விமர்சனம்
தூத்துக்குடியில் காவல்துறை விசாரணைக்குப் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, திமுக துணைப் பொதுச்செயலாளரும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நாகர்கோவிலைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் போலீஸ் சித்திரவதையால் மேலும் ஒரு இளைஞர் உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார். மேலும், “காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும்
