இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் ஆழமான ராணுவ மற்றும் வரலாற்று நட்பை பேணிவரும் ரஷ்யா, இப்போது பாகிஸ்தானுடன் புதிய ஒப்பந்தத்தில் கைகோர்த்திருப்பது இந்தியாவுக்கு பெரும் அதிர்ச்சியாகும். பாகிஸ்தானின் ஸ்டீல் தொழிற்சாலையை மீண்டும் உயிர்ப்பிக்க ரஷ்யா உதவி செய்யும் முடிவை எடுத்துள்ளது.
இனிமேல் பாகிஸ்தானுக்கு ரஷ்ய ஆதரவு? கராச்சியில் உள்ள பாகிஸ்தான் ஸ்டீல் மில்ஸ் தொழிற்சாலை கடந்த 2015ஆம் ஆண்டு மூடப்பட்ட நிலையில், தற்போது ரஷ்ய தூதர் டெனிஷ் நஸ்ரூவேவ் மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் இடையே புதிய ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் ஆலையை நவீனப்படுத்தி மீண்டும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது பாகிஸ்தானின் ஸ்டீல் இறக்குமதியை 30% குறைக்கும் என்றும், வெளிநாட்டு செலவுகளை வருடத்திற்கு $2.6 பில்லியனாக தாழ்த்தும் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவுக்கு தலைவலி ஏன்? இது வெறும் தொழில்துறை ஒப்பந்தமாக மட்டுமல்ல. இரு நாடுகளும் பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவுகளையும் விரிவாக்க வாய்ப்பு உள்ளதால், ரஷ்யா – பாகிஸ்தான் கூட்டணிக்கு இந்தியா மிகுந்த கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் பஹல்காமில் நடத்திய தாக்குதலுக்குப் பதிலளிக்க ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற ராணுவ நடவடிக்கையின் மூலம் இந்தியா பதிலடி கொடுத்தது. இதில் பிரமோஸ் ஏவுகணைகள், S-400 பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட ரஷ்ய ஆயுதங்கள் முக்கிய பங்கு வகித்தன. இவை ரஷ்யா மற்றும் இந்தியா இணைந்து பயன்படுத்தும் முக்கிய உபகரணங்கள்.
இனி அந்த ஆயுதங்கள் பாகிஸ்தானுக்கும்? இந்த சூழலில், ரஷ்யா பாதுகாப்பு ஒப்பந்தங்களை பாகிஸ்தானுடனும் மேற்கொண்டால், இந்தியா எதிர்கொள்ளும் பாதுகாப்பு சவால்கள் அதிகரிக்கலாம். ரஷ்யா இந்தியாவுக்குப் பக்கமாக இருக்கும்போது, பாகிஸ்தானுடன் விரிவாக நட்பு வளர்ப்பது “முதுகில் குத்தும்” செயல் என விமர்சிக்கப்படுகிறது.
நிபுணர்கள் எச்சரிக்கை: இந்த மாற்றத்தைக் கண்காணிக்க இந்திய அரசு திட்டமிட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், ரஷ்யாவுடன் தனது நட்புறவுகளை பாதுகாக்கும் வகையில் மீளாய்வு செய்ய வேண்டும் என்றும் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.