சசி தரூரின் கண்டனத்தைத் தொடர்ந்து கொலம்பியா தனது பாகிஸ்தான் குறித்த அறிக்கையை திரும்ப பெற்றது!
Politics

சசி தரூரின் கண்டனத்தைத் தொடர்ந்து கொலம்பியா தனது பாகிஸ்தான் குறித்த அறிக்கையை திரும்ப பெற்றது!

May 31, 2025

இந்தியா நடத்திய “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையில் பாகிஸ்தானில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த கொலம்பியாவின் முந்தைய அறிக்கையை, காங்கிரஸ் எம்பி சசி தரூர் கடுமையாக கண்டித்ததைத் தொடர்ந்து அந்த நாடு தற்போது திரும்ப பெற்றுள்ளது. தற்போது புதிய மற்றும் திருத்தப்பட்ட அறிக்கை வெளியிடப்படும் என கொலம்பியா உறுதிப்படுத்தியுள்ளது.

ஐந்து நாடுகள் கொண்ட சுற்றுப்பயணத்தில் பங்கேற்று பல்கட்சி குழுவை தலைமையேற்கும் தரூர், கொலம்பியாவின் துணை வெளியுறவு அமைச்சருடன் சந்தித்தபோது, “தாக்குதலில் உயிரிழந்த பயணிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே ஒப்புமை இல்லாது போனதே நம்முடைய கவலையாக இருந்தது,” எனக் குறிப்பிட்டார்.

துணை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோசா யொலண்டா வில்லாவிசென்சியோ கூறுகையில், “இந்த விஷயத்தில் உங்கள் நிலைப்பாட்டை நாங்கள் புரிந்துகொண்டோம். அதனை மதிக்கிறோம். முன்பு வெளியான அறிக்கையை நாங்கள் வாபஸ் பெற்றுவிட்டோம்,” என்றார். மேலும், காஷ்மீரில் நடந்த உண்மை நிலைமையைப் பற்றி அவர்கள் அறிந்த பின்னர், இந்தியாவுடன் தொடர்ச்சியான உரையாடலுக்கு தயாராக இருப்பதாகவும் கூறினார்.

ஏற்கனவே கொலம்பியாவின் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த தரூர், மீண்டும் ஊடகத்திடம் பேசியபோது, “தீவிரவாதிகள் மற்றும் நிரபராத பொதுமக்கள் இடையே ஒப்புமை எதுவும் இருக்க முடியாது. நாங்கள் சொன்னது புரிந்து கொண்டு கொலம்பியா தங்களது அறிக்கையை திரும்பப் பெற்றது மகிழ்ச்சியை தருகிறது,” என கூறினார்.

இந்தக் குழுவில் உள்ள பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யாவும், “பயணிகள் கொல்லப்படுவது மற்றும் தீவிரவாதிகள் வேட்டையாடப்படுவது ஒரே மாதிரியானது அல்ல. கொலம்பியா நம் தரக்கோளுக்கு மதிப்பு கொடுத்து, முன்னைய அறிக்கையை வாபஸ் பெற்றது நல்ல விஷயமாகும்,” என தெரிவித்தார்.

ஏற்கனவே, பஹல்காம் பகுதியில் பயணிகள் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பதிலடி கொடுத்து, தீவிரவாதிகள் பதுக்கி இருந்த முகாம்களை அழித்தது. இந்த தாக்குதலுக்கு, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர் இ தொய்பா அமைப்பின் கிளை ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ பொறுப்பேற்றிருந்தது.

இந்திய அரசு தற்போது உலக நாடுகளுக்கு “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையின் நியாயத்தை விளக்கும் நோக்கில், 7 குழுக்களை அனுப்பியுள்ளது. இதில் ஒன்று, சசி தரூர் தலைமையிலான குழுவாகும். இவர் தலைமையிலான குழு விரைவில் அமெரிக்காவுக்கும் செல்லும் என கூறப்படுகிறது.

அரசியல் செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *