முழுமையான கல்வியறிவை எட்டிய மிசோரம்: கல்வித் துறையில் வரலாற்று சாதனை
Education

முழுமையான கல்வியறிவை எட்டிய மிசோரம்: கல்வித் துறையில் வரலாற்று சாதனை

May 21, 2025

இந்தியாவின் முதல் முழுமையான கல்வியறிவு பெற்ற மாநிலமாக மிசோரம் மாறியுள்ளது என்று முதல்வர் லால்துஹோமா செவ்வாய்க்கிழமை அறிவித்தார் . மத்திய கல்வித் துறை இணையமைச்சர் ஜெயந்த் சவுத்ரி முன்னிலையில் ஐஸ்வாலில் முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மிசோரமின் கல்வியறிவு விகிதம் 91.3% ஆக இருந்தது. இதன் மூலம் நாட்டின் மூன்றாவது அதிக கல்வியறிவு பெற்ற மாநிலமாக மிசோரம் மாறியது. இதைத் தொடர்ந்து, மீதமுள்ள நபர்களுக்கு கல்வி கற்பிப்பதற்காக மத்திய அரசு நிதியுதவி அளிக்கும் திட்டமான புதிய இந்தியா எழுத்தறிவு திட்டம் செயல்படுத்தப்பட்டதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மிசோரமில் கல்வியறிவு விகிதம் 95% ஐத் தாண்டிவிட்டது, இது மத்திய கல்வி அமைச்சகத்தால் முழு கல்வியறிவுக்கு சமமானதாகக் கருதப்படுகிறது. செவ்வாயன்று, லால்துஹோமா, முழு கல்வியறிவு பெற்ற மாநிலமாக மாறுவது மிசோரமின் “பயணத்தில் ஒரு வரலாற்று தருணம் ” என்று கூறினார். “இது ஒரு மாற்றத்தின் மைல்கல், இது நமது மக்களின் கூட்டு விருப்பம், ஒழுக்கம் மற்றும் தொலைநோக்குப் பார்வையைப் பிரதிபலிக்கிறது” என்று முதல்வர் கூறினார். ” தொடர்ச்சியான கல்வி, டிஜிட்டல் அணுகல் மற்றும் தொழில் திறன் பயிற்சி மூலம்” மாநிலத்தில் உயர் கல்வியறிவு நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று லால்துஹோமா கூறினார் . “இப்போது நாம் உயர்ந்த இலக்கை அடைவோம்: டிஜிட்டல் கல்வியறிவு, நிதி கல்வியறிவு மற்றும் அனைத்து மிசோக்களுக்கும் தொழில் முனைவோர் திறன்” என்று அவர் மேலும் கூறினார்.

அரசியல் செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *