இந்திய அணி சூப்பர் ஸ்டார் மனப்பான்மையிலிருந்து வெளியேற வேண்டும்” – ஹர்பஜன் சிங் அதிருப்தி தெரிவித்தார்
Sports

இந்திய அணி சூப்பர் ஸ்டார் மனப்பான்மையிலிருந்து வெளியேற வேண்டும்” – ஹர்பஜன் சிங் அதிருப்தி தெரிவித்தார்

Jan 8, 2025
  • “ராகுல் டிராவிட் இருந்தபோது எல்லாம் சரியாக இருந்தது, இந்திய அணி உலகக்கோப்பையை வென்றது. ஆனால் திடீரென என்ன ஆனது?” – ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பினார்.

ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி, கம்பீர் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பின்னர் தோல்வி முகமாக இருக்கிறது.

குறிப்பாக, இலங்கையிடம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் தொடரை இழந்தது, நியூசிலாந்திடம் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது, ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் தொடரை இழந்தது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறாதது ஆகியவற்றால் இந்திய அணி கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.

இந்திய அணி - கம்பீர், ரோஹித்
இந்திய அணி – கம்பீர், ரோஹித்

சுனில் கவாஸ்கர், இர்பான் பதான் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் தொடர்ச்சியாகப் பல்வேறு கருத்துகளைக் கூறிவருகின்றனர். அந்த வரிசையில், இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், சூப்பர் ஸ்டார் மனப்பான்மையிலிருந்து இந்திய அணி வெளிவர வேண்டும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *