பெற்றோரைக் கைவிட்டால் சம்பளத்தில் கட்! – தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியின் அதிரடி உத்தரவு
பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் விடுவதும், அவர்களைப் பராமரிக்காமல் கைவிடுவதுமான போக்கு அரசு ஊழியர்கள் மத்தியிலும் அதிகரித்து வருவது கவலையளிப்பதாகத் தெலங்கானா அரசு தெரிவித்துள்ளது. இதனைத் தடுக்க, அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஒரு அதிரடி சட்டத்தைக் கொண்டு வந்துள்ளார்.
முக்கிய அம்சங்கள்:
- சம்பளத்தில் பிடித்தம்: அரசு ஊழியர்கள் தங்கள் பெற்றோரைச் சரியாகப் பராமரிக்கவில்லை எனப் புகார் நிரூபிக்கப்பட்டால், அவர்களது மாதச் சம்பளத்தில் 25% முதல் 30% வரை பிடித்தம் செய்யப்படும்.
- நேரடியாகப் பெற்றோருக்கு: பிடித்தம் செய்யப்படும் அந்தத் தொகை, பாதிக்கப்பட்ட பெற்றோரின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
- புகார் அளிக்கும் முறை: பெற்றோர்கள் தங்களைப் பிள்ளைகள் கவனிக்கவில்லை என்றால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலோ அல்லது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமோ புகார் அளிக்கலாம்.
ஏன் இந்த நடவடிக்கை?
சமூகத்தில் முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும், கைவிடப்பட்ட பெற்றோர்களின் நிலையையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. “அரசு ஊழியர்கள் சமூகத்திற்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். சொந்தப் பெற்றோரை மதிக்காதவர்கள் பொதுமக்களுக்கு எப்படிச் சேவை செய்வார்கள்?” என்ற கேள்வியை முன்வைத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் எங்கே இது நடைமுறையில் உள்ளது?
தெலங்கானாவிற்கு முன்னதாகவே, அசாம் மாநிலத்தில் இதேபோன்ற ‘பணாம்’ (PRANAM) சட்டம் நடைமுறையில் உள்ளது. அங்கு அரசு ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு பகுதி கழிக்கப்பட்டு, அவர்களது பெற்றோருக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
