அப்படியென்ன முக்கியத்துவம் இதற்கு” என்று கேள்வி எழலாம்.
இது 60-70களில் நடந்திருந்தாலும் வெற்றியாக கருதப்பட்டு பாரட்டப்பட்டிருக்கும். ஆனால் இந்த காலகட்டத்தில் நிகழ்வதால் தான் இது வரலாற்று சிறப்பு மிக்க ஒர வெற்றி.
நவதாராளமையம் பல பத்தாண்டுகளாக வேரூன்றி இன்று முழுவீச்சில் இயங்குகிறது. கடந்த காலத்தில் இல்லாத அளவிற்கு முறைசாரா தொழிலாளர்களை வைத்தே தனது தேவைகளின் பெரும்பகுதியை பூர்த்தி செய்யும் திறனை வளர்த்துக் கொண்டு சிரிக்கிறது முதலாளித்துவம். ஒப்பந்த தொழிலாளர்களை காட்டி நிரந்தர தொழிலாளர்களின் போராட்டங்கள் மழுங்கடிக்கும் உத்தியை கச்சிதமாக பழகியுள்ளது.
எல்லா நாடுகளிலும் இருப்பது போலவே வட இந்திய தொழிலாளர்கள், வேறு மாநில தொழிலாளர்கள் என்று கலக்கும் காலத்தில் தொழிலாளர்கள் மத்தியில் சாதி, மதம் மற்றும் மொழியை வைத்து பிளவு ஏற்படுத்தும் எல்லா தந்திரங்களையும் கூர்த்தீட்டி வைத்திருக்கிறது. அன்று பத்திரிகையோடு நின்ற எதிர் பிரச்சாரம் இன்று தொலைக்காட்சியைத் தாண்டி சமூக ஊடகங்கள் வழியே ஒவ்வொருவர் கைகளுக்கும் விஷமாக பரவுவது எதார்த்தமாக உள்ளது.
தொடர் பொய் பிரச்சாரங்களால் பொது மனநிலை தொழிற்சங்கம் என்ற கூற்றுக்கே எதிராக தான் உள்ளது. எல்லாத்தையும் விட யார் தூண்டுதலுமே இல்லாமல் தாமாகவே தொழிற்சங்கம், அல்லது மக்கள் எந்த விதத்தில் அமைப்பாவதையும் கடுமையாக எதிர்க்கும் ஒரு தனிநபர் நலன் என்ற உலகப்பார்வையில் ஊறிக்கிடக்கும் ஒரு படித்த நடுத்தர வர்க்கத்தை உருவாக்கி, மூலை சலவை செய்து வைத்திருக்கிறது முதலாளித்துவம்.
இரண்டாம் உலகப் போருக்கு பிறகு முப்பது வருடங்களுக்கு, முதலாளித்துவ கட்சிகளுக்குக் கூட அவர்கள் ஆட்சியில் இருக்கும் போது வர்க்க சமரசம் செய்ய வேண்டிய தேவை இருந்தது. இன்று அப்படியில்லை, வெளிப்படையாக, துளியளவு சமரசமும் இல்லாமல் முதலாளித்துவ நலன்களில் இயங்கும் சூழல். அக்கட்சிகளின் திவ்வி முதலாளித்துவ பிரச்சாரப் பிரிவுகள்.
இவை அனைத்தும் இந்த காலத்திற்கே உரித்தான எதிர் அம்சங்கள். இவை அனைத்தையும் எதிர்த்து தான் தோழர் முத்துக்குமார் தலைமையிலான CITU தொழிலாளர் போராட்டம் வெற்றிப் பெற்றுருகிறது. அதும் சாதாரண நிறுவனத்தில் அல்ல. நான் செத்தாலும் தொழிற்சங்கம் அமைக்க விடமாட்டேன் என்று சபதம் எடுத்தவனின் கொடூரமான நிறுவனத்தை எதிர்த்து வெற்றி அடைந்திருக்கின்றனர்.
எவனாச்சும் “இந்த உண்டியல் குழுக்கிகளால் என்ன செஞ்சுற முடியும்” என்று நக்கலாக கேட்டால் இதை எடுத்து முகத்தில் அடியுங்கள்.