திருநெல்வேலி கவின்: சாதி வெறியால் பறிக்கப்பட்ட ஒரு பொறியாளரின் கனவு…மௌனம் கலைக்குமா தமிழ்நாடு?
ஜூலை 27, 2025. ஞாயிற்றுக்கிழமை. திருநெல்வேலி மாநகரின் பரபரப்பான கே.டி.சி நகர். அன்றாட அலுவல்களும், மனிதர்களின் நடமாட்டமும் நிறைந்திருந்த அந்தப் பட்டப்பகலில், நவீன தமிழ்நாடு வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒரு கொடூரம் அரங்கேறியது. 27 வயதான கவின் செல்வ கணேஷ் என்ற மென்பொருள் பொறியாளர், சாதி வெறியின் கோரப் பசிக்கு இரையாக்கப்பட்டு, குருதி வெள்ளத்தில் சரிந்து கிடந்தார். இது ஒரு
கலைஞரின் ஆட்சிக்காலம், விவசாயிகளின் பொற்காலம் – தமிழ்நாட்டில் பசுமை புரட்சி செய்த தி.மு.க. அரசு
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்” என்ற அய்யன் திருவள்ளுவரின் வாக்கு, திராவிட இயக்கத்தின் விவசாயக் கொள்கைகளுக்கு ஊந்துகோலாக அமைந்தது. மண்ணையும் மக்களையும் தனது இரு கண்களாகப் பாவித்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற ஒவ்வொரு காலகட்டத்திலும், விவசாயிகளின் நலனையும், வேளாண்மையின் வளர்ச்சியையும் தனது ஆட்சியின் உயிர்நாடியாகக் கருதினார். அவரது தலைமையிலான தி.மு.க அரசின்
மனிதனை மனிதன் இழுக்கும் அவலத்திற்கு முற்றுப்புள்ளி: கை ரிக்ஷாக்களை ஒழித்த கலைஞரின் மனிதாபிமானப் புரட்சி!
திராவிட இயக்கத்தின் அரசியல் என்பது வெறும் ஆட்சி அதிகாரத்திற்கானதல்ல; அது சமூகத்தின் வேர்களில் புரையோடிப் போயிருக்கும் ஏற்றத்தாழ்வுகளையும், மனித தன்மானத்திற்கு எதிரான இழிவுகளையும் களைவதற்கான ஒரு சித்தாந்தப் போர். அந்தப் போரின் மிக முக்கியமான அத்தியாயங்களில் ஒன்றுதான், தமிழ் மண்ணில் இருந்து கை ரிக்ஷாக்கள் என்ற கொடிய முறையை முற்றிலுமாக ஒழித்தது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், மனிதனை சக மனிதனே
தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென் மாநிலங்களை பழிவாங்கும் பாஜக. முன் நின்று துணிந்து போராடும் திராவிட மாடல் முதல்வர்.
2011-ல் நடைபெற்ற கடைசி மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், மக்களவை உறுப்பினர் இடங்களை மீண்டும் ஒதுக்கீடு செய்யும் தொகுதி மறுசீரமைப்பு (Delimitation ) குறித்த விவாதங்கள் இந்தியா முழுவதும் எழுந்திருக்கின்றன. நீண்ட காலமாக தொகுதி மறுசீரமைப்பு பற்றி பேசாமல் மௌனமாக இருந்த மாநிலங்கள் கூட தற்போது பேச தொடங்கியிருக்கிறது. இந்த எழுச்சிக்கு காரணம், தமிழ் நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
கிராமப்புற பெண்களின் கல்வியறிவு விகிதத்தில் உலக நாடுகளுக்கே முன்னோடியாக திகழும் பாஜகவால் புறக்கணிக்கப்படும் மாநிலங்கள்.
இந்தியாவின் கிராமப்புறங்களில் கல்வியறிவைப் பொறுத்தவரை, விகிதங்கள் 2011-ல் 67.77 சதவீதத்தில் இருந்து 2023-24ல் 77.5%ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், மாநிலங்களுக்கு இடையேயான வேறுபாடுகள் மற்றும் பாலின அடிப்படையிலான இடைவெளிகள் ஒரு சிக்கலான கதையை வெளிப்படுத்துகின்றன. இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) ஆட்சியில் உள்ள கேரளா, 95.49% கிராமப்புற பெண்கள் கல்வியறிவு விகிதத்துடன் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறது. கல்வியை முன்னுரிமையாகக் கொண்டு,
பாஜகவோடு கைகோர்த்து உச்சநீதிமன்றம், இட ஒதுக்கீட்டில் செய்த மற்றொரு அயோக்கியத்தனம். தென் மாநிலங்களை பழிவாங்கும் செயலா?
சென்ற புதன்கிழமை (ஜனவரி 29) அளிக்கப்பட்ட முக்கியமான தீர்ப்பு ஒன்றில், முதுகலை மருத்துவ இடங்களில் வசிப்பிடம் அடிப்படையிலான இடஒதுக்கீடுகள் அரசியலமைப்பு பிரிவு 14-ஐ (Article14) மீறுவதால் அரசியலமைப்புக்கு முரணானது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மாநில ஒதுக்கீட்டு இடங்களில் வசிப்பிடம் அடிப்படையிலான இடஒதுக்கீடுகளை அனுமதிப்பது அரசியலமைப்பு ரீதியாக செல்லாது என நீதிமன்றம் கூறியது. இந்த இடங்கள் நீட் தேர்வில் தகுதியின் அடிப்படையில்