“2026-ல் 60% வாக்குகள்… 24 தொகுதிகள்!” – காரைக்காலில் அமித் ஷா அதிரடி முழக்கம்!
காரைக்காலில் இன்று (பிப். 14, 2026) நடைபெற்ற பிரம்மாண்ட பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, புதுச்சேரி அரசின் செயல்பாடு மற்றும் வரவிருக்கும் தேர்தல் வியூகம் குறித்துப் பேசினார்.
பேச்சின் முக்கியச் சிறப்பம்சங்கள்:
- தேர்தல் இலக்கு: “கடந்த 2021 தேர்தலில் மக்கள் எங்களுக்கு 44% வாக்குகளை அளித்தனர். ஆனால், வரும் 2026 தேர்தலில் 60% வாக்குகளைப் பெற்று, 24 தொகுதிகளில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்” என்று அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.
- சுயமான அரசு: “முந்தைய ஆட்சியில் ஊழல் மலிந்து கிடந்தது. ஆனால், தற்போது ரங்கசாமி – மோடி தலைமையில் புதுச்சேரி அரசு எந்தத் தலையீடும் இன்றி சுயமாகவும், நிலையான ஆட்சியாகவும் இயங்கி வருகிறது” எனப் பாராட்டினார்.
- வளர்ச்சிப் பணிகள்: புதுச்சேரியின் ஜவுளித் துறைக்கு உயிர் கொடுத்திருப்பதாகவும், சட்டம் – ஒழுங்கைச் சீர் செய்து மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு சென்றிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
- பாகிஸ்தான் மீதான தாக்குதல்: காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அன்றாட நிகழ்வாக இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், மோடி ஆட்சியில் புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் மீது வான்வழித் தாக்குதல் நடத்திப் பதிலடி கொடுக்கப்பட்டதை நினைவுகூர்ந்தார்.
- தமிழ் மொழி மீது மரியாதை: “உலகின் தொன்மையான மொழியான தமிழில் பேச முடியவில்லையே” என்று கூட்டத்தில் மன்னிப்பு கேட்ட அவர், திருநள்ளாறு சனீஸ்வரர் மற்றும் பத்ரகாளி அம்மனை வணங்கித் தனது உரையைத் தொடங்கினார்.
