மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வருகை செய்ததை அடுத்து , திமுக துணைப்பொது செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு .ஆ. ராசா தீவிர அரசியல் விமர்சனத்தை செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார் .அமித்ஷா பேசிய மதவாத பிளவு பேச்சுகள் நாட்டின் ஜனநாயகத்தை சீர்குலைக்க கூடியவை என்றும் ‘அப்பட்டமான பொய் ,அருவருப்பான வஞ்சகம், மதவாத பேச்சு என்று அவர் ஆவேசமாக சாடினார்.இதை அடுத்து கீழடி முதல் தொகுதி மறுவரையறை வரை ஒன்றிய அரசின் நடவடிக்கைகளை குறித்து ஆர் .ராசா கண்டனம் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது நாட்டின் உள்துறை அமைச்சர் என்ற தகுதியை மறந்து அப்பட்டமான பொய்களை அமித்ஷா பேசியுள்ளார் .திமுக அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அமைச்சர் சுமத்தியுள்ளார். அருவருப்பான வஞ்சகம் நிறைந்த மாநிலத்தை பிளவுபடுத்தும் நோக்கத்துடன் அமித் ஷா பேசியுள்ளார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் குறைக்கும் வகையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக பேசியிருக்கிறார். அமித்சாவின் பேச்சு கூட்டாட்சி தத்துவத்திற்கு நல்லது கிடையாது அமைதியாக உள்ள தமிழ்நாட்டில் மதவாத பிளவு உண்டாக்கும் வகையில் பேச்சு உள்ளது. அரசியல் சித்து விளையாட்டுகளை நிறுத்த வேண்டும் அரசியலுக்காக மிகவும் கீழ்த்தரமாக பேசியுள்ள அமைச்சரின் கருத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள் என திட்டவட்டமாக ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
“மோடியும், அமித் ஷாவும் தமிழ்நாட்டுக்கு அதிகமாக வர வர, திமுகவின் வாக்குப் பங்கும் அதிகமாகிறது. இது வரவேற்கத்தக்க வளர்ச்சி,” என அவர் திட்டவட்டமாக கூறினார்.
“பாஜகவின் எந்தவித மத்திய அரசியல் அம்சமும் தமிழ்நாட்டில் ஈடுபடாது. மக்கள் அதை நிராகரிக்கிறார்கள்,” என விமர்சித்தார்.
தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக விவாதிக்க தயார். டெல்லியிலா? சென்னையிலா? புவனேஸ்வரிலா? எங்கே வேண்டுமானாலும் நான் வருகிறேன். ஆனால், இந்தியாவில் மட்டுமே பேசாதீர்கள்!” என்ற அவர், அமித் ஷாவை நேரடியாக சவாலிட்டார்.
இல்லாத சரஸ்வதி நாகரிகத்திற்கும் , பேசாத சமஸ்கிருதத்திற்கு மட்டும்தான் ஒன்றிய பாஜக அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்கிறது’ பாஜக அரசின் மத்திய பட்ஜெட் நிதி ஒதுக்கீடுகள், குறிப்பாக மத மற்றும் வட இந்தியக் கலாசாரங்களுக்கு எதிராகவும், தமிழ் மொழி, கல்வி மற்றும் பண்பாட்டுக்கு வழங்கப்படும் ஆதரவு குறைவாக இருப்பதாகவும் கண்டனம் தெரிவித்தார்.
திமுகவை பார்த்து அமித்ஷாவுக்கு தான் ஷாக்கடிக்குது என்று ஆ .ராசா கூறியிருக்கிறார்.
அமித்ஷாவை பார்த்தால் எங்களுக்கு ஏன் ? ஷாக் அடிக்க வேண்டும் திமுகவை பார்த்து ஷாக் அடித்துதானே அமித்ஷா தமிழகம் வந்துள்ளார் .பிரதமர் எதற்காக ஐந்து முறை தமிழகம் வர வேண்டும்? கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த அறிக்கை திருப்பி அனுப்பியது ஏன்? தமிழ் குறித்து தமிழர்கள் குறித்தும் பேசும் மத்திய பாஜக அரசு கீழடி ஆய்வை ஏற்க மறுப்பது ஏன்? வட கிழக்கில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்தியை திணித்து விட்டார்கள். இல்லாத சரஸ்வதி நதி சமஸ்கிருத மொழிக்கு எதற்காக நிதி ஒதுக்கீடு. பாஜகவின் இந்து மத அரசியல் தமிழ்நாட்டில் ஈடுபடவில்லை அவர்களை பார்த்தால் எங்களுக்கு சிரிப்பாக தான் உள்ளது. நேரடி வரி வருவாய் மூலம் மத்திய அரசுக்கு நான்கு மடங்கு வருவாய் என அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்ட வாக்குறுதி ஒன்றுதான் பாக்கி பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக முதலமைச்சரிடம் ஒரு திட்டம் உள்ளது. சட்டசபை தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் 98 சதவீதம் நிறைவேற்றி விட்டோம் மத்திய அரசு நிதி வழங்காத நிலையிலும் மாநில நிதியில் இருந்து வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதை தாங்கிக்கொள்ள முன் முடியவில்லை என்று ராசா கூறினார்.
“மோடியும், அமித் ஷாவும் தமிழ்நாட்டுக்கே வரட்டும் – அதனால் தமிழர்கள் அதிகரிக்கப்படுவார்கள்; திமுகவுக்கான வாக்குகளும் அதிகரிக்கப்படும்,” என்ற ராசாவின் வார்த்தைகள், பாஜக அரசின் பாசிச போக்குகளுக்கு உரிய பதிலாக அமைந்தன.
இந்திய ஜனநாயகம் ஒரு பன்முக, பன்மொழி, பல மதம் கொண்ட நாடு. ஆனால் பாஜக வலியுறுத்தும் மனுவாத, மதவாத அரசியல், நாட்டின் அச்சில தன்மையை சீர்குலைக்கிறது என திமுகவின் செய்தியாளர் சந்திப்பில் ஆ.ராசா வலியுறுத்தினார்.