பாஜகவின் ‘செக்’ வைத்த திட்டம்.. ஸ்டாலினின் ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’! மகளிர் கணக்கில் ரூ. 5,000 வந்தது எப்படி? – அதிரடி பின்னணி!
தமிழகத்தில் 1.31 கோடி பெண்களின் வங்கி கணக்கில் இன்று காலை ரூ. 5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இது ஏதோ சாதாரண வரவு அல்ல; இதன் பின்னணியில் மிகப்பெரிய அரசியல் சதுரங்க வேட்டையே ஒளிந்திருக்கிறது. தேர்தலைக் காரணம் காட்டி இந்தத் திட்டத்தை முடக்க நினைத்த சக்திகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் கொடுத்துள்ள பதிலடி இது.
திட்டத்தை முடக்க நடந்த சதி?
சமீபகாலமாக பாஜக ஆளும் மாநிலங்களில் சில நடைமுறைகள் கூர்ந்து கவனிக்கப்படுகின்றன:
- மகாராஷ்டிரா உதாரணம்: அங்கு நடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது ‘லட்கி பாகின்’ (Ladki Bahin) திட்டம் தேர்தல் ஆணையத்தால் நிறுத்தி வைக்கப்பட்டது.
- அசாம் மாடல்: அங்கு பண்டிகைக்காக பாஜக அரசு சிறப்புத் நிதி வழங்கத் திட்டமிட்டுள்ளது. ஆனால், அதே சமயம் தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் இத்தகைய திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட பாஜக திரைமறைவு வேலைகளைச் செய்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
- உச்சநீதிமன்ற வழக்கு: இலவசங்களுக்கு எதிராக மார்ச் முதல் வாரத்தில் உச்சநீதிமன்றத்தில் விசாரணை வரவுள்ளது. அதில் ஒருவேளை பாதகமான தீர்ப்பு வந்தால், மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருந்தது.
இவற்றை முன்கூட்டியே கணித்த முதல்வர் ஸ்டாலின், தேர்தல் ஆணையம் கெடுபிடி விதிக்கும் முன்பே பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான தொகையையும் (ரூ. 3,000), கோடைக்கால சிறப்புத் தொகையையும் (ரூ. 2,000) சேர்த்து ரூ. 5,000 வழங்கி பாஜகவின் கணக்கைத் தவிடுபொடியாக்கியுள்ளார்.
பொருளாதாரம் சாத்தியமா? – விமர்சனங்களுக்குப் பதில்!
“இவ்வளவு பணத்திற்கு எங்கே போவார்கள்?” என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்குத் திராவிட மாடல் அரசு தரவுகளுடன் பதில் அளித்துள்ளது:
- நேரடிப் பயன்: கலைஞர் உரிமைத் தொகை முதல் புதுமைப் பெண் திட்டம் வரை 2 கோடி பேர் நேரடியாகப் பலன் பெறுகின்றனர்.
- பொருளாதார வளர்ச்சி: அதிமுக ஆட்சியில் பாதாளத்தில் இருந்த தமிழகப் பொருளாதாரம், தற்போது 16% வளர்ச்சியுடன் இந்தியாவில் முன்னணியில் உள்ளது.
- முதலீடுகள்: தொடர்ச்சியான உலக முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் புதிய வேலைவாய்ப்புகள் மூலம் ஈட்டப்படும் வருவாய், அடுத்த ஆட்சியில் உரிமைத் தொகையை ரூ. 2,000 ஆக உயர்த்தப் போதுமானதாக இருக்கும்.
“மக்களைப் பாதிக்க விடமாட்டோம்” என்கிற உறுதியுடன், அடுத்த 5 ஆண்டுகளுக்கான திராவிட மாடல் 2.0-வின் அடித்தளமாக இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது.
