நாடாளுமன்றத்தில் உச்சகட்ட மோதல்: சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் – காங்கிரஸ் அதிரடி!
National

நாடாளுமன்றத்தில் உச்சகட்ட மோதல்: சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் – காங்கிரஸ் அதிரடி!

Feb 10, 2026

புது தில்லி: நாடாளுமன்றத்தின் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவர காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பான நோட்டீஸை விரைவில் மக்களவைச் செயலாளர் உத்பல் குமார் சிங்கிடம் காங்கிரஸ் சமர்ப்பிக்க உள்ளது.

பின்னணி: கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துத் தொடர் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இதனால் அவைகள் அடிக்கடி ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மக்களவை கூடிய போதும், எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் மதியம் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

காங்கிரஸ் எடுத்த முடிவு: சபாநாயகரின் செயல்பாடுகள் ஒருதலைப்பட்சமாக இருப்பதாகக் குற்றம் சாட்டும் காங்கிரஸ் கட்சி, திங்கள்கிழமை அன்றே தனது எம்.பி-க்களிடம் இதற்கான கையெழுத்துகளைப் பெற்றது.

நடைமுறை என்ன? மக்களவை விதி 201-ன் கீழ் சபாநாயகரை நீக்க வேண்டுமெனில், தீர்மானம் கொண்டு வருவதற்கு 14 நாட்களுக்கு முன்னதாக நோட்டீஸ் அளிக்கப்பட வேண்டும். இந்த தீர்மானத்திற்கு குறைந்தபட்சம் 50 எம்.பி-க்களின் ஆதரவு அவசியமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *