தலையங்கம்

இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசிய நீதிபதி: நீதிமன்ற ஒழுக்கத்தையும் ஜனநாயக நம்பிக்கையையும் கேள்விக்குள்ளாக்கும் புதிய சர்ச்சை!

Jun 14, 2025

இந்திய ஜனநாயகத்தின் மூன்று தளங்களுள் ஒன்று நீதித்துறை. சட்டத்திற்கு உரிய மரியாதை, நீதியின் சமத்துவம், மத நல்லிணக்கம் ஆகியவையும் நீதிமன்றத்தின் அடிப்படை மதிப்பீடுகளாகும். ஆனால், தற்போது நீதிபதி சந்திரகுமார் யாதவ் உருவாக்கிய சர்ச்சை, இந்த நீதித்துறை மீது கூடக் கேள்வி எழும்பும் வகையில் உள்ளது.

இந்தியாவில் மதத்தின் அடிப்படையில் சமூகங்களுக்கு இடையே ஏற்கனவே முறிவு நிலவுகிறது. இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் உடைய துணை அமைப்பான BHP (Bajrang Dal) ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்து கொண்ட நீதிபதி சந்திரகுமார் யாதவ், தனது உரையில் ஹிந்துக்களையும் முஸ்லிம்களையும் நேரடியாக ஒப்பிடும் வகையில் கருத்துகள் தெரிவித்தார்.

அவரது ஆவேச உரையில்,

  • ஹிந்து குழந்தைகள் வேதம், புராணம் படித்து வளர்கிறார்கள் என்றும்,
  • அகிம்சையின் அடிப்படையில் செயல்படுகிறார்கள் என்றும்,
  • பசுமாடுகளிடம் அன்பு செலுத்துகிறார்கள் என்றும் கூறினார்.

மறுபுறம், இஸ்லாமியர்கள் குறித்து நான்கு முதல் ஐந்து மனைவிகளை வைத்திருப்பதாக கூறிய கருத்து, மத வெறுப்பை தூண்டக்கூடிய வகையில் இருந்தது. இது, இந்திய அரசியலமைப்பின் மதச்சார்பற்ற கோட்பாட்டுக்கு எதிரானது என்பது தெளிவாக இருக்கிறது.இப்படியாக அவர் கூறிய விஷயங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி பாராளுமன்றத்தில் வழக்காக பதிவு செய்யப்பட்டது ஆனால் எந்த தீர்ப்பும் பாராளுமன்றம் வழங்காதது ஏன்? இதற்கு துணை ஜனாதிபதியாக இருக்கக்கூடிய தன்கர் அவர்கள் உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் எழுதி இருக்கிறார். .. கடிதத்தில் குறிப்பிட்டு இருந்ததை நீதிபதி கபில் சிபில் வெட்ட வெளிச்சமாக கூறிவிட்டார்..கடிதத்தில் கூறி இருந்ததாவது…. பாராளுமன்றத்துக்குள்ள இருக்கு.. நாங்க பாத்துக்குறோம் இந்த பிரச்சனையும் நாங்க தீர்த்துக்கிறோம் .என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டதாக கபில் சிபில் அவர்கள் கூறியிருந்தார்.இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசி சர்ச்சை உருவாக்கிய நீதிபதியின் மீது நடவடிக்கை எடுக்காது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றன.இந்நிலையில் நீதிபதிக்கு ஆதரவாக துணை ஜனாதிபதி தன்கர் அவர்கள் கடிதம் எழுதிருப்பது சட்டவிரோதமாக உள்ளது.இந்தச் சூழ்நிலையில், நீதிபதி சந்திரகுமார் யாதவ் மீது விசாரணை நடத்தி, அவரது ஒழுக்கத்தை சோதிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது அரசியல் கட்சிகளின் மட்டுமல்லாது, மக்களினதும் அவசியமான கோரிக்கையாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *